நமது அரசியல்சாசனம் நமது நாட்டை “மாநிலங்களின் ஒன்றியம்” என்று அழைக்கிறது. மாநிலங்கள் மொழிவாரி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா பல தேசியஇனங்களின் கூட்டமைப்பு என்பது இப்படியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பம் முதல் எதிர்த்த அமைப்பு ஆர்எஸ்எஸ். அரசியல்சாசனம் உருவாக்கப் பட்ட காலத்திலேயே அதன் அடிப்படைக் கூறு களை எதிர்த்தது மட்டுமல்லாது, அதில் மனு சாஸ்திர அம்சங்கள் இல்லையே என்று கவலைப்பட்டது. பிரதமர் நேருவையும், சட்ட அமைச்சர் அம்பேத்கரையும் இதற்காகக் கடுமையாகச் சாடியது அதன் ஏடாகிய “ஆர்கனைசர்”.
1955-56இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது அதை வன்மையாகக் கண்டித்து அது முன்வைத்த வாதங்கள், மொழிவழி தேசியஇனங்களே இந்தியாவில் இல்லை, இங்கு இருப்பது எல்லாம் இந்துமத, அதாவது வேதமத வழிப்பட்ட ஒற்றை தேசியமே, அதற்கான மொழி சமஸ்கிருதமே, அதிலிருந்தே தமிழ் உள்ளிட்ட சகல மொழி களும் வந்தன என்பதே. இதன் நீட்சியாக மாநி லங்கள், மாநில அரசுகள், மாநில சட்ட மன்றங்கள் என்பவையே கூடாது, உச்சியில் மத்திய அரசு கீழே பஞ்சாயத்துகள் எனும் ஒற்றையாட்சி முறையே தேவை என்றது. 1956 ஜுலையில் அது போட்ட தீர்மானம் கூறியது: “பாரதத்தின் ஒற்றுமையைப் பராமரிக்கும் ஒரே வழி ஒற்றையாட்சி முறையே. நாட்டை சீர்குலைக்கும் கொள்கைகளைக் கைவிட்டு ஒற்றையாட்சி முறையைக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்துகிறது”. (RSS Resolves:: 1950-1983)
இதே ஆண்டில் தான் எழுதிய “தேவை ஒற்றையாட்சி முறை” எனும் கட்டுரையில் “மாநிலங்கள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். ஒரு நாடு, ஒரு அரசு, ஒரு நாடாளு மன்றம், ஒரு நிர்வாகம் என்பதைப் பிரகடனப்படுத்த வேண்டும்” (Bunch of Thoughts) என்று பச்சையாக அறிவித்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர். இந்த ஆர்எஸ்எஸ்தான் பாஜக எனும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறது. ஒரு கட்சி பல துணை அமைப்புகளை கொண்டி ருக்கும், ஒரு கட்சியையே துணை அமைப்பா கக் கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ்தான்! அத னால்தான் அதன் அரசியல் பிரிவாகிய பாஜக, மாநிலங்களை நஞ்சாய் வெறுப் பதைக் காண்கிறோம். இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக முதலில் அமைந்தது ஆந்திரா. அதை இரண் டாக உடைப்பதில் தனது கோட்பாட்டின் வெற்றி அடங்கியிருப்பதை உணர்ந்து அதை உற்சாகமாக வரவேற்றது பாஜக. இத்தகைய கட்சி ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு பிரிவாகிய 370ஐ நீக்கியது மட்டுமல்லாது, அதுவொரு மாநிலம் என்பதையே ஒழித்துகட்டி இரு யூனியன் பிரதேசங்களாக உடைத்துக்காட்டியது.
தமிழ்நாட்டின் கோவை மண்டலத்தில் தனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டவுடன் அதை “கொங்கு நாடு” என்று தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததிலும் அதன் மொழிவழி தேசியஇன மறுப்பு வெளிப்பட்டதைக் காணலாம். வாய்ப்புக் கிடைத்தால் மொழிவாரி தேசிய இன மாநிலங்களை உடைக்கும், அதன் நீட்சியாக கூட்டாட்சி என்பதையே தகர்த்து அத னிடத்தில் ஒற்றையாட்சி முறையை முடிவில் கொண்டுவரும் பாஜக. தனிப் பெரும்பான்மையுடன் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து இதை நோக்கியே காய்கள் நகர்த்தப்படுகின்றன. இந்தியோடு சேர்த்து சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது. அதனது புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள புதிய மும்மொழிக் கொள்கை இதையே நோக்க மாகக் கொண்டது. அது சமஸ்கிருதத்திற்கு தனி முக்கியத்துவம் தந்து அதை சகல மட்டங் களிலும் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளது. அப்படியே இந்தி ஆசிரியர்களை பெரு வாரியாக உருவாக்கவும் சிறப்புத் திட்டம் வகுத்துள்ளது.
உள்துறை அமைச்சகம் முழுக்க முழுக்க இந்தியில்தான் இயங்குகிறது என்று பெரு மையோடு அமித் ஷா அறிவித்தது இந்தக் கொள்கை எப்படி செயல்பாட்டு உருவம் எடுக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி தமிழை உலகின் தொன்மையான மொழி என்று புகழ்ந்து பேசுகிறாரே என்று நினைக்கக் கூடும். ஆனால் அதுவெல்லாம் பேச்சளவில்தான். செயலில் தமிழுக்கு என்ன செய்திருக்கிறார்? தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ் இன்னும் அலுவல் மொழியாகவில்லை- அதற்கு அரசியல்சாசனத்தில் ஏற்கெனவே வழி இருந்தும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் “கேந்திரிய வித்யாலயா” பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக்கூட இல்லை. இங்குள்ள வங்கிகள், தபால்நிலை யங்களில் தமிழில் படிவங்கள் கொண்டு வரவும் மதுரை மார்க்சிஸ்ட் எம். பி. தோழர் சு.வெங்கடேசன் போர்க்குரல் எழுப்ப வேண்டி யுள்ளது. எனவே பிரதமரின் பேச்சு “சீனி சக்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா” கதைதான்.
இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு தீர்வு எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் ஒன்றியத்தின் அலுவல் மொழி களாக ஆக்குவதுதான். அப்பொழுது தானி யங்கியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளுக்கும் உரிய இடம் கிடைக்கும். இந்த அறிவியல் யுகத்தில் அது சாத்தியமே. ஐரோப்பிய ஒன்றியத்தில் 24 மொழிகள் அலு வல் மொழிகளாக உள்ளன. ஆனால் சமஸ் கிருதமே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளுக் கும் தாய் என்கிற சங்கிகளின் ஆட்சி ஒரு போதும் இதைச் செய்யாது. மொழி உரிமைப் போரின் வெற்றி என்பது ஆர்எஸ்எஸ்சை அரசியல்ரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் வீழ்த்துவதில் இருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பாஜக அரசு படுவேகமாகப் பறித்து வருகிறது. மாநில அதிகாரப் பட்டியலிலிருந்த கல்வி காங்கிர சின் அவசரநிலை ஆட்சிக் காலத்தில் ஒத்தி சைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காங்கிரசை எதிர்ப்பதாகச் சொல்லும் பாஜக அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றாதது மட்டுமல்லாது முழுமையாக ஆக்கிரமதித்துக் கொண்டுவிட்டது. நீட்டை திணிப்பதில் அதை துல்லியமாகக் காண லாம்.
மருத்துவக் கல்விக்கு மட்டுமல்லாது அனைத்து பட்டப் படிப்புகளுக்கும்கூட அத்தகைய நுழைவுத்தேர்வை கொண்டு வந்து விட்டார்கள்! தான் உருவாக்கும் கல்லூரிகளில் தனது முறைமைப்படி மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்த முடியாத நிலை உருவாக்கப்படுகிறது. இதில் ஆளுநர்களின் அடாவடித்தனங்கள் வெளிப்படுகின்றன. “தனக்கு திருப்தி ஏற்படாதவரை எந்தவொரு மசோதாவிற்கும் ஒப்புதல் தர இயலாது” என்கிறார் தமிழ்நாடு ஆளுநர். இவருக்கு எப்போது திருப்தி வரும்? பாஜகவின் சிந்தனைக்கு ஏற்ப மசோதாக்கள் இருந்தால்தான்! அதாவது தமிழக மக்கள் தோற்கடித்த பாஜ கவின் சிந்தனைகள் ராஜ்பவன் மூலமாக நிறை வேறும், தமிழர்களின் தீர்ப்பு அர்த்தமிழந்து போகும், ஒற்றையாட்சி முறை மறைமுகமாக அமலாகும்.
ஆளுநர்கள் அரசியல்சாசனத்திற்கு பதிலாக ஆர்எஸ்எஸ்சிற்கு உண்மையான வர்களாக இருக்கிறார்கள். இந்த ஆபத்தை தடுக்க அவர்களது நியமனம், நீக்கம் உள்ளிட்ட விஷயங்களில் மாநிலஅரசின் பங்களிப்பு இருக்கவேண்டியதும், அதற் கேற்ப அரசியல்சாசனத்தை திருத்த வேண்டி யதும் அவசியத்திலும் அவசியமாகும். இதற்கும் பாஜக ஆட்சியை தூக்கி எறிந்தாக வேண்டும். மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை ஜிஎஸ்டி மூலம் பெருமளவு பறித்துவிட்டது ஒன்றிய அரசு. மாநிலங்கள் வரியை வசூலித்து ஒன்றியத்திடம் கொடுத்துவிட்டு, பிறகு தனது பங்கைப் பெற கையேந்தி நிற்கின்றன. இன்னும் கொடுமை என்ன வென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தர சொத்து வரியை உயர்த்துமாறு அவற்றுக்கு ஒன்றிய அரசு நிபந்தனை விதிப்பது! மக்களை சக்கையாகக் கசக்கிப் பிழியும் மாபாதகத்தை மாநிலங்கள் மீது சுமத்து கிறது பாஜக அரசு. இந்தக் கொடூரம் நிறைந்த கேவலமான நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பாஜக அல்லாத மாநில அரசுகள் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். இல்லை யெனில் விடிவு காலம் இல்லை.
ஒவ்வொரு பாஜக அல்லாத மாநில அரசும் தன் அளவில் தான் தேர்ந்தெடுத்த வடிவில் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக் கின்றன. ஆனால் அது போதாது என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் அனு பவங்கள் உணர்த்துகின்றன. ஒன்றுபட்ட உரி மைக் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதன் இறுதி லட்சியம்: நியாயமான மாநில சுயாட்சி, உண்மையான ஒன்றிய கூட்டாட்சி. இந்திய ஒற்றுமையை கண்ணின் கருமணியாய் கருதுகிறவர்கள் கம்யூனிஸ்டுகள். அந்த நோக்கிலிருந்தே இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார்கள். காரணம் இது அந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்பதால். ஆனால் ஒற்றையாட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் பாஜக ஆட்சி இருக்கும்வரை இது நடக்காது. இந்திய ஒற்றுமையை வலுப்படுத்த இந்த கேடுகெட்ட ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும். அந்த தேச பக்த போராட்டத்தில்தான் மாநில உரிமைகளும் வென்றெடுக்கப்படும். மாநில உரிமைப் போரும் பாஜகவை வீழ்த்துப் போரும் ஒன்றென அறிக!