தங்கள் நாட்டின் மீதான தடைகளை நீக்குவதில் நடை முறை வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அமெ ரிக்காவை ஈரான் வலியுறுத்தியுள்ளது. அதுதான் அவர்கள் தரும் உறுதிமொழிகள் மீது நம்பகத்தன்மையை உருவாக்கும் என்று ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சயீது காடிப்சதே கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்காக ஈரான் மற்றும் ஐந்து பெரிய நாடுகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்குகிறது.
புதிதாக இடதுசாரித் தலைவர் சியாமரோ காஸ்ட்ரோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஹோண்டுரசுடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஒத்துழைப்பைப் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று மெக்சிகோவின் ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடார் விருப்பம் தெரிவித்துள்ளார். “ஹோண்டுரசின் புதிய ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோ ஒரு சமூகப் போராளி. கோட்பாடுகளை உறுதியாகக் கடைப்பிடிக்கும் அவருக்கும், அவரது அரசுக்கும் மக்கள் ஆதரவும் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனம் மேற்குக் கரைப்பகுதியின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலின் சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் பதிவு செய்யப்பட்ட வாகனம் மீது எந்தவித எச்சரிக்கையும், காரண முமின்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்த னர். நான்காவது நபரை அப்படைகள் கைது செய்துள்ளனர்.