ஆற்று வெள்ளம் மேட்டு மேலே ஏறுது -தெருவில் ஆழி போல அலைகள் கொண்டு மாறுது! ஊற்று நீராய் வீட்டில் எல்லாம் பாயுது-அங்கே உள்ள தெல்லாம் அடித்துக் கொண்டு போவுது!
மக்கள் எல்லாம் உயிரைக் காக்க ஓடுது-ஆடு மாடு கோழி அள்ளி வெள்ளம் ஆடுது நிற்கும் வீட்டை நீரின் வேகம் வீழ்த்துது நிறைந்த மரங்கள் காற்றின் வேகம் சாய்க்குது!
ஊழி வெள்ளம் பார்த்து மக்கள் நொந்தனர்-ஊரில் உணவும் நீரும் இடமும் இன்றி வெந்தனர்! சூழும் துன்பம் நீக்க வல்லார் யாவரே?-அங்கே துன்பம் போக்கும் கருணை உள்ளம் ஆவரே!
விளைந்த பயிர்கள் வீணாய் அழுகிப் போச்சுது-உழவர் விட்ட கண்ணீர் வீதி நிறைய லாச்சுது களைந்து துன்பம் போக்க வேண்டும் அரசு-உழவர் காக்க விரைந்து கொடுக்க வேண்டும் காசு!
விளைத்த பொருட்கு உரிய விலையோ இல்லை-ஒன்றியம் விதைக்கும் துன்பம் அதனால் பெரிய தொல்லை அளவிலா சட்டத் திருத்தக் கொடுமை -மோடி ஆட்சி மக்கள் மீது எய்யும் அம்பை!
களைத்து விட்டது விவசாயி வாழ்வு-அவன் காணும் இன்பத் தீர்வு தானா சாவு? சளைக்க மாட்டான் விவசாயி சரிவை -அவன் சங்கொலி முழக்கம் போக்கும் தாழ்வை.