பகுத்தறிவாளர் கழகத்தின் தமிழ் வார முப்பெரும் விழா
கும்பகோணம், மே 6 - கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ஏப்.14- புரட்சியாளர் அம்பேத் கர், ஏப்.29 - புரட்சிக்கவிஞர் பாவேந்தர், மே 5 புரட்சியாளர் மாமேதை மார்க்ஸ் ஆகியோ ரின் பிறந்த நாள் விழா, ‘தமிழ் வார முப்பெரும் விழாவாக’ கும்பகோணம் பெரியார் மாளி கையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின், இளம்சிறுத் தைகள் எழுச்சி பாசறையின் மாநிலச் செய லாளர் கும்கோணம் தமிழினி தலைமையேற்று உரையாற்றினார். திராவிட கழக கும்பகோ ணம் மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, காப்பா ளர் வை.இளங்கோவன், விசிக மாவட்ட துணைச் செயலாளர் செ.செல்வராஜ், தமுஎகச கும்பகோணம் மாநகரச் செயலா ளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ந.சிவக்குமார் வரவேற்றார். தொடர்ந்து, “பகுத்தறிவு இலக்கியத்தின் பண்பாட்டு பெட்டகம் - பாவேந்தர்” என்ற தலைப்பில் திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் சு.விசயக்குமார் பேசினார். “சமூக மாற்றத்திற்கான மும்மருந்து - பெரி யார் அண்ணல் மார்க்ஸ்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலை ஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் பேசினார். ரெ.வைர முடி நன்றி கூறினார்.