மதுரை, ஜூலை 9- மதுரை ஆவினுக்கு தரமான, கலப்படமற்ற பாலை சுத்தமான முறையில் வழங்கும்படி மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யத்தின் மேலாளர் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் சுதாதாரமான முறையில் பாலை கொள்முதல் செய்து ஒன்றியத்திற்கு அனுப்புங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறு கையில், “ஆவினுக்கு தரமற்ற பால், கலப்பட பால் வழங்கப்படுகிறது, இதை கட்டுப்படுத்துங்கள் என பால் உற்பத்தியாளர்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கோரிக்கை வைப்ப வர்களின் பாலை பெற மறுத்த வரலாறும் ஆவினுக்கு உண்டு. இந்த நிலையில் ஆவின் பொது மேலாளர் அறிக்கை சிறப்புக் கவனம் பெறுகிறது. மதுரை ஆவி னில் 3 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் வரை கை யாளமுடியும். தற்போது 3,39,000 லிட்டர் பால் கை யாளப்படுகிறது. இதை அரசு நிறுவனமான ஆவி னால் சமாளிக்க முடியும். அதிகப்படியாக வரும் பாலை என்னசெய்வது என யோசிப்பதற்கு பதில், “மதுரை ஆவினுக்கு தரமான, கலப்படமற்ற பாலை சுத்தமான முறையில் வழங்குங்கள் எனக் கூறுகிறார்” தரமற்ற, கலப்படமற்ற பால் வழங்கு பவர்களை நீக்க வேண்டுமென ஒழிய இப்படி யொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேர்மை யான பால் உற்பத்தியாளர்களின் பாலை மறுப்ப தற்கு வித்திடுகிறேதோ என எண்ணத் தோன்று கிறது. யார் பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்பது ஆவினுக்கு நன்கு தெரியும். இன்றைக்கும் அவர் களது பால் தொடர்ந்து கொள்முதல் செய்யப் பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.