tamilnadu

img

பட்டா கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

பட்டா கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு பேச்சு

தருமபுரி, ஜூன் 10- நிலமற்ற ஏழை மக்களுக்கு பட்டா கிடைக் கும் வரை எங்களது போராட்டம் தொடரும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தெரிவித் துள்ளார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டத்தில் பூவல்மடுவு, இண்டூர் பாறக்கொட் டாய், தாளம் பள்ளம் சவுளுபட்டி, மிட்டா ரெட்டி அள்ளி, சத்யா நகர், பூவல்மடுவு, நத்த  அள்ளி, தோக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்க ளில் தரிசு நிலம், கல்லாங்குத்து, பாறை, காடு, கிராம நத்தம், அரசு புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களில் பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், அங்கேயே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். வழக்கொழிந்த நீர் நிலைகள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், வனத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்க ளில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப்பட்டாவும், வீட்டுமனைப்பட்டாவும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, கட்சி யின் இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ். எஸ்.சின்னராஜ், சி.சேகர் ஆகியோர் தலைமை  வகித்தனர். அப்போது, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு பேசுகையில், கேர ளம் மாநிலத்தில் வீடற்றவர்களுக்கு நான்கு சதுரடியில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் வீடு  கட்டி கொடுக்கப்படுகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் நடைமுறைபடுத்த வேண் டும். தமிழ்நாடு அரசு கூறியதுபோல, புறம் போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பூவல்மடுவு பகுதி யில் 6 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்குவதாக அறிவித்து, குறைந்த நபர்களுக்கு பட்டா வழங்விட்டு, மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. எனவே அங்குள்ள அனை வருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். அரசுக்கு தேவையென்றால் நீர்  நிலைகள், மேய்ச்சல் பகுதி என பலவகை யான நிலங்களை எடுத்து பயன்படுத்தி கொள் கிறது. ஆனால், நூறு ஆண்டுகளாக குடியி ருந்து, விவசாயம் செய்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க மறுக்கிறது. எனவே வழக் கொழிந்த நீர்நிலைகள், புறம்போக்கு உள் ளிட்ட நிலங்களை வகை மாற்றம் செய்து நிலப் பட்டா, மனைபட்டா வழங்க வேண்டும். தவ றும் பட்டசத்தில் தொடர் போராட்டத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும், என் றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், கே.எல்லப்பன், ஆர்.சின்னசாமி, வழக்கறி ஞர் பி.மாதேஸ், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.முனியப்பன், பி.காளி, பி.ராமன், எல்.மாலா, சி.காவேரி, என்.சிவப்பிரகாசம் உட் பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட னர். முடிவில், 300க்கும் மேற்பட்ட மனுக் களை கட்சி தலைவர்கள் வழங்கினர்.