tamilnadu

img

சொந்தக்காரர்களே சுடலாமா?

மதுரை, அக்.23- “எங்கள் சொந்தக்காரர்களே ஏன் எங்கள் மீனவர்களைச் சுட வேண்டும்;  அரசாங்கம் எனக்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற  சம்பவங்கள்  இனி நடக்காமல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’’ என்று கண்ணீர் விட்டார் மீனவர் வீரவேலின் மனைவி மதுமதி. தீபாவளி வருகிறதே கூடுதலாக பணம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என அவரது மனைவியிடம் கூறிவிட்டு கடலுக்குச் சென்றுள்ளார் வீரவேல். அக்டோபர் 15-ஆம் தேதி நள்ளிரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 10பேர் கொண்ட  அணியில் வீரவேலும் ஒருவர்.  அவர்கள் பாக் வளைகுடாவில் இருந்த போது அக்.21-ஆம் தேதி இந்தியக் கடற் படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 கி.வீரவேல் சுடப்பட்ட செய்தி அவரது  மனைவி வி.மதுமதிக்கு (26) 21-ஆம் தேதி அதிகாலை எட்டியது. கணவர் படுகாயத்து டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பரத அறிந்து, தனது மகள் ஒன்பது மாத  குழந்தை வி.சயனிகா, மகன் வி.விஜித்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். கணவரின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்த அவர்,  எதிர்காலத்தைப் பற்றி  கவலையடைந்தார். என  குழந்தை களுக்கான உணவுத் தேவையை எப்படி நிறைவேற்றுவேன் என்றார். காயமடைந்த எனது கணவருக்கு குறைந்தபட்ச முதலுதவி அளித்து கரைக்குக் கொண்டு சேர்த்தனர். தனது  கணவருக்கு வழங்கப்படும் தரமான சிகிச்சைக்கும், அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.  மதுமதியின் உறவினர் எம்.அர்ச்சனா  கூறுகையில், கடல்தான் எங்கள் வீடு. எங்கள் ஒரே வாழ்வாதாரம். கடலில்  ஏற்கனவே பல ஆபத்துகளை எதிர்கொள் கிறோம். எங்களைப் பாதுகாக்க வேண்டி யவர்களே துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றார்.

“எங்களது படகில் நான்கு தேசியக் கொடிகள் ஏற்றபட்டிருந்தன. அப்படி யிருக்கையில் இந்தியக் கடற்படை எப்படி தாக்குதல் நடத்தியது எனத் தெரிய வில்லை” என்கிறார் கடற்படை தாக்குத லில் காயமடைந்தவர்களில் ஒருவரின் உறவினரான ஏ.தண்டபாணி. வீரவேலுடன் படகில் இருந்த சக மீனவர் பி.செல்லதுரை (46) கூறுகையில், கடற்படையினர் 50 மீட்டர் தொலைவில் இருந்தனர்; துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு ஃபோகஸ் லைட் வெளிச்சம் எங்கள் படகின் மீது பாய்ச்சப்பட்டது. எங்கள் படகு  கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் கப்ப லுக்கு இணையான வேகம் கிடையாது. அவர்கள் எங்களை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதை அவர்கள் மேற்கொள்ளாமல் எந்த தர்க்கரீதி யான காரணமும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  துப்பாக்கிச்சூட்டில் வீரவேல் காய மடைந்த நிலையில், நாங்கள் கைகளை உயர்த்தி நின்றோம்.

கப்பலில் இருந்த ஒரு வீரர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை  அளித்தார். அப்போது​எங்கள் அனை வரையும் மண்டியிடச் செய்தனர். எங்களிட மிருந்த மொபைல் போன்களை பறித்துக் கொண்டு  கம்பிகளாலும், காலணி களாலும் தாக்குதல் நடத்தினர். காய மடைந்தவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், காய மடைந்த மீனவர், விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் நாங்கள்  எங்கள் படகிற்குத் திரும்பினோம். படகில் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். எதுவும் கிடைக்காததால், எங்கள் பட கிலேயே அவர்களைப் பின்தொடரும்படி கேட்டுக் கொண்டனர்.  உத்தரவுக்குக் கீழ்ப்ப டியாவிட்டால் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்று மிரட்டினர் என்றார். நலமாக உள்ளார் வீரவேல் உடல்நிலை சீராக இருப்ப தாக அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேல் தெரிவித்தார். “துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட துகள் கள்” அவரது முதுகின் வலது பக்கமாக ஊடு ருவி, அவரது வயிற்றின் முன்புறம் வழியாக  வெளியேறியுள்ளது. அவரது இடது தொடை யில் காயங்களும் உள்ளன. வீரவேல் பத்து நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.  எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த இரண்டு மாதங்களில் அவர் மீண்டும் பணியைத் தொடரலாம் என்றார்.

இந்திய கடற்படையினரால் சுடப்பட்டு படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற மயிலாடுதுறை மீனவர் வீரவேலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாநகர துணை மேயர் தி.நாகராஜன் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன்  ஆகியோர் ஞாயிறன்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.