ஆதிவாசி மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் (ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் - AARM) 4வது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் செவ்வாயன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டு தியாகிகள் சதுக்கத்தில், இந்திய தேசத்தின் பழங்குடி மக்கள் உரிமை போராட்டங்களின் நாயகியாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் செவ்வணக்கம் செலுத்தினார். உடன் தலைவர்கள். (செய்தி, படங்கள் : 8)