tamilnadu

12 மணி நேரவேலை சட்ட மசோதா ரத்து வரவேற்கத்தக்கது

விருதுநகர், மே 1- தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென  தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வேலைதிருத்தச்  சட்ட மசோதாவை ரத்து செய்த முதல்வருக்கு நன்றியையும் வாழ்த்துக்களை யும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். விருதுநகரில் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:- தொழிலாளர் வர்க்க தினமான மே நாளில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்களுக்கு  மேதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சிகாகோ நகரில் தொடங்கிய மகத்தான போராட்டம் இன்று வரை  தொடர்கிறது.  தொடர் போராட்டங் களால் இன்று பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ளோம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நாம் இழப்பதற்கு ஒன்று மில்லை, அடிமை விலங்கைத் தவிர.  ஆனால், அடைவதற்கோ ஓர் பொன்னுல கம் காத்திருக்கிறது’ என்ற மாமேதை காரல் மார்க்ஸ் வெளியிட்ட அறைகூவ லுக்கு இணங்க மே தினம் உலகம் முழு வதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தை கொண்டாடிய பெருமை  மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கத் தலை வர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரையே சாரும். அதன் 100-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். இந்தி யாவை ஆட்டிப் படைக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும்  அதானியின் ஏஜெண்டாக திகழும்; மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தும் நோக்கத்தோடு மதவெறி ஆட்சி நடத்தி வரும் பாஜக-வை 2024  நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தும்  மகத்தான கடமையை நிறைவேற்று வோம் என  மேதின நாளில் அனை வரும்  உறுதியேற்க வேண்டும். சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தம் வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். சிபிஐ, விசிக கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.  மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இந்த எதிர்ப்பு உணர்வுகளைப் புரிந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை நிறுத்தி வைத்தார். நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. மோசமான சட்டம், வரலாற்றில் இடம் பெறுவது தமிழகத்திற்கு பெரும் அவ மானம். எனவே அதைத் திரும்பப் பெற  வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொண்டோம்.

இதையடுத்து தமிழக முதல்வர் மேதின நாளில் சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் சமூகத்தில் பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது. சாதிய ஏற்றத்தாழ்வுகள்  கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. உழைப்பாளி மக்களில் பட்டியலின மக்க ளுக்கு  சமமான வாழ்க்கை என்பது  கனவாகவே உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்டு சமதர்ம  சமுதாயத்தை அமைக்க விரும்பு கிறோம். சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து  சமத்துவ வாழ்க்கையை உரு வாக்குவதற்கு அனைவரும் உறுதி யேற்க வேண்டும் என்றார்.

தானியங்கி மது விற்பனை தேவையற்றது

சென்னையில் கொண்டுவரப் பட்டுள்ள தானியங்கி மது விற்பனை குறித்த கேள்விக்கு பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “இது தேவையற்ற ஒன்று, தானியங்கி மூலம் மது விற்க வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது, படிப்படியாக மதுப்பழக்கத்தை  மக்கள் குறைப்பதற்குத் தேவையான  முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். ஆறு மாதத்திற்கு முன்பே பாஜக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளாரே என்ற  கேள்விக்கு பதிலளித்த மாநிலச் செய லாளர், “எப்போது தேர்தல் நடத்த முன் வந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளது.  அடுத்த மாதமே தேர்தல் வைத்தாலும்  தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40  தொகுதியிலும்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும். ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற முடியாது. கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில்  பாஜக படு தோல்வியடைவது உறுதி. அக்கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பாஜகவின் தோல்வியை உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். இமாச்சல் பிரதேச மாநிலத் தேர்தலில் தோல்வி, தில்லி மாநக ராட்சித் தேர்தலில் தோல்வி, கர்நாடக மாநிலத்திலும் தோற்கப்போகிறது. எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாஜகவிற்கு தோல்வி நிச்சயம். இது எழுதப்படாத உண்மை என்றார்.