சங்ககால நீர் மேலாண்மையின் சான்று
கொழுமத்தில் குமண மன்னன் ஆட்சி!
உடுமலை அருகே கொழுமத் தில் சங்ககால நீர் மேலாண்மைக் கான சான்றுகள் கிடைத்துள்ளன. கொழுமத்தில் குமண மன்னன் வாழ்ந்த பகுதி சங்க இலக்கியப் பாடல் களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. புறநானூற்றில் 158 முதல் 164 வரையிலான பாடல்களில் கொழுமத்தின் மலைப்பகுதி குறித் தும், நீர் மேலாண்மை குறித்தும் கூறப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடுக் கடுக்காக இருப்பதும், ஒன்றன் பின் ஒன்றாக இருப்பதும் இயற்கையா னது. மலைப்பகுதிக்குச் சென்றால் ஒவ்வொரு மலைப்பகுதிக்கு இடையி லும் சுமார் 2 கி.மீட்டர் இடைவெளி இருப்பதும், அங்கு மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தி ருப்பதும் தெரிய வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கூக்கால், மன்னவனூர் பகுதியில் குதிரை மலைப்பகுதியிலிருந்து நீர் உரு வாகி வருகிறது. இது ஆத்தூர், கொழு மம், நல்லண்ணகவுண்டன்புதூர், அய்யம்பாளையம், மடத்தூர், சங்க ராமநல்லூர் பேரூராட்சி முழுமைக் கும் பாசனம் பெற உதவுகிறது. கொழுமத்திற்குக் கிழக்கில் பவளகுளம், கோதையம்மன் குளம், அம்மா குளம், புதுக்குளம், ஓட்டுக் குளம், பஞ்சந்தாங்கிக்குளம், ராயர் குளம் ஆகிய குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் மக்கள் வாழ்வி டங்களாகவே இருந்துள்ளன. ராயர் குளத்தில் நீர்ப்பறவைகள் அதிகள வில் இருக்கின்றன. குறிப்பாக வெயில் காலம் அடுத்து வரும் வசந்த காலங்களில் வெளிநாட்டுப் பறவை கள் அதிகளவில் இங்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் செல்கின்றன. நம் மண் சாராத பறவைகள் நீர் நிலைகளில் வந்து தங்கி செல்வது என்பது ஆயிரம் ஆண்டு காலத்திற் கும் முற்பட்ட நாகரிகத்தை உணர்த் துகிறது. இந்த இடம் சங்க இலக்கி யம் கூறும் குமண மன்னன் வாழ்ந்த பகுதியாகக் கூறுவது பொருத்தமு டையது. புறநானூறு பாடல்களில் வரும் சந்தன மரங்கள், குமுக மரங் கள் அதிகம் உள்ள இடமாகவும் இது உள்ளது. புறநானூறு பாடலில், அந்தக் கால மக்கள் மானின் இறைச்சியை நன்கு சுண்டக்காய்ச்சிய பாலில் சுட்டுச் சாப்பிட்டதாகக் கூறப்பட்டுள் ளது. கொத்தன் கரடு, கொல்லன் கரடு பகுதிகளில் மான்கள் வசிக்கின் றன. குதிரை மலையிலிருந்து வரும் நீர் குவணச்சேரி மக்களுக்குப் பயன்படும் வகையில் ராயர் குளம் இருந்துள்ளது. ராயர் என்பதும் ஒரு வகை பழங்கால சொல். குதிரை ஆற் றிலிருந்து வரும் நீர் இயற்கையாக ஒவ்வொரு குளமாக நிரம்பி அடுத்த டுத்த குளங்களுக்கு வருவதை சங்க கால மக்களின் நீர் மேலாண்மைக் குச் சான்றாகக் கூறலாம். பஞ்சந்தாங்கி குளம், கடுமை யான வெயில் காலங்களிலும் தண் ணீர் இருக்கும் குளமாக உள்ளது. எனவே வேளாண் மக்களின் பஞ்சத் தைத் தீர்க்கும் வகையில் இந்தக் குளம் ஆழமாகவும், அகலமாகவும் இருப்பதால் இப்பெயர் பெற்றுள் ளது. இங்கு ஆண்டு முழுவதும் நெற் பயிரிட்டு வேளாண்மை செய்து வரு கின்றனர். வயல்வெளிகளில் பழங் கால மக்கள் வசித்தமைக்கான தொல்லியல் எச்சங்களாக கற்திட்டை கள், கருப்பு சிவப்பு ஓடுகள் கிடக் கின்றன. (உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் குமண மன்னன் சரித்திரத்திற்காக ஆய்வு செய்யும்போது இந்த நீர் மேலாண்மை பதிவாகியுள்ளது)