சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாலி னத்தை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை அந்நாட்டு அரசு எளிமையாக்கியுள்ளது. ஐரோப்பா வில் தனது பாலினத்தைத் தேர்வு செய்து கொள்ள உரிமை கோரிப் பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய இயக்கங்களின் கோரிக்கை யை நடைமுறைப்படுத்தும் வகையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மக்கள் சட்டப்பூர்வமாகத் தங்கள் பாலினத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஸ்விட்சர்லாந்து அறி வித்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக சூடானில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை காவல் துறையினர் கலைக்க முயன்றதால், வன்முறை வெடித் தது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக் கும் இடையில் சண்டை மூண்டது. இதில் 58 காவல் துறையினர் கடுமையான காயம் அடைந்ததாக நிர்வா கம் தெரிவித்துள்ளது. எத்தனை போராட்டக்காரர்கள் காயமடைந்தனர் என்ற விபரங்களை நிர்வாகம் இதுவரையில் வெளியிடவில்லை.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான பிரச்ச னையில் அமெரிக்கா தலையிடுவதால் சிக்கல் அதிகரித்துள்ளது. நேட்டோ மூலமாகத் தலையிட அமெ ரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் நேரடியாக சந்தித்துப் பேசுவது என்று ரஷ்ய மற்றும் ஜெர்மனி அரசு அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். உக்ரைன் மீதான அரசியல் பதற்றத்தைத் தவிர்க்க என்ன செய்வ தென்று இரு தரப்பும் விவாதிக்கப் போகிறார்கள்.