tamilnadu

img

திடீர் மழையால் பாதிப்பு: டெல்டா விவசாயிகள் துயரம்

தஞ்சாவூர்/நாகப்பட்டினம்/அறந்தாங்கி, ஜன. 2 - தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட் களாக கொட்டித் தீர்க்கும் கனமழை காரண மாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் கள் தண்ணீரில் மூழ்கின. முற்றிய நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பயிரி டப்பட்டு பூக்கும் தருவாயில் உள்ள நெறபயிர்கள் பதராக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரத்தநாடு, மேலஉளூர், சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப் பட்டு, சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின.  இதேபோல் மார்கழிப் பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்த கடலை வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் கடலை அழுகும் நிலை யில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லும் பயிரிடப்பட்டிருந்த நெல், கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். 

விவசாயிகள் சங்கம் 

அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதால், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை மூலம் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வீடு இடிந்து விழுந்து காயம் பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் மச்சு வீட்டின் கூரை இடிந்து விழுந்த தில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த விவ சாயி ஜனார்த்தனன் என்பவர் இடுப்பில் அடிபட்டு பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். 

சிபிஎம் ஆறுதல் 

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. அதனை வடிய வைக்கும் முயற்சி களில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  சேதுபாவா சத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் அருகே செம்பருத்தி நகரில் வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர். எம்.வீரப்பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகுந்த மழைநீர், மோட்டார் எந்திரம் மூலம் இறைத்து வெளியேற்றப்பட்டது.

நாகப்பட்டினம் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் விளைந்து அறு வடைக்கு தயாரான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. பாப்பாகோவில் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது.

வேதாரண்யம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளான மணக்காடு, வண்டுவஞ் சேரி, கரியாப்பட்டினம், வாய்மேடு, தாணிக் கோட்டகம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், கோடியக்கரை, கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி, செம் போடை, குரவப்புலம், தலைஞாயிறு, உம்பளச் சேரி, துளசிராம், நீர்முளை, வெள்ளப்பள்ளம், மணக்குடி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் அகஸ்தியம்பள்ளி, கோடி யக்காடு, கடினல்வயல் பகுதியிலுள்ள உப்ப ளங்கள் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சி யளிக்கிறது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 13 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் அருகே உள்ள பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு  விட்டு மிதமான மழை முதல் கனமழை பெய்து  வருகிறது. இதனால் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்த விவசாயிகள் அதிர்ச்சி யில் உள்ளனர். சம்பா நெற்பயிர் இன்னும் 15  நாளில் அறுவடைக்கு தயாராகி கொண்டிருக்கிற நிலையில், திடீரென மழை பெய்து வருவது அனைத்து விவசாயிகளிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது காற்றுடன் மழை பெய்து வருவ தால் நெற்பயிர் கதிர்களுடன் வயலில் தேங்கி யுள்ள தண்ணீரில் சாய்ந்து மூழ்கி விட்டது. இத னால் வளர்ந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  கொள்ளிடம் பகுதியில் மட்டும் தற்போது 3500 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. கொள்ளிடம் அருகே உள்ள  முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மட்டும் சனிக்கிழமை 20 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. 

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் தாலுகா பூவலூர் வட்டம் பிராந்தனி வருவாய் கிராமத்தில் கருங்காடு, பாண்டி பத்திரம், பிராந்தணி மற்றும் பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களும், பத்து நாட்களில் அறுவடை செய்ய உள்ள நெல் பயிர்கள் முற்றியும், முற்றாத நிலை யிலும் உள்ளன. தற்போது மூன்று நாட்களாக பெய்த கனமழையால் நெல் பயிர்கள் அனைத்தும் சாய்ந்தன. அறுவடைக்கு தயாராக உள்ள கதிர்களின் மேல் தண்ணீர் நிற்பதால் அழுகும் நிலையில் உள்ளன. இதில் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  கடந்த நவம்பரில் கொட்டித் தீர்த்த மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது பெய்து வரும்  கனமழை காரணமாக விவசாயிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை  கடன் வாங்கி செலவு செய்துள்ள நிலையில், தற்போது பெய்த பெருமழை அவர்களை நிலை குலையச் செய்துள்ளது.  முறையான வடிகால் வசதி இல்லாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வடிய ஒரு வாரம் ஆகலாம். ஆனால் தொடர் மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  இன்னும் தொடர்மழை பெய்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும்.  எனவே அதிகாரிகள் பாதிக்கபட்ட பகுதிகைளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப தொடர்ந்து விவசாயி கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.