tamilnadu

அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை,பிப்.2- ஊழல் குற்றச்சாட்டுக் குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க கோரி எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, மது ரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், 2 ஆண்டு கள் பொது நல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து  விட்டதாகவும், பிறப்பு முதல் இறப்பு சான்று பெறுவது வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக கூறி,  அனைத்து அலுவலகங்க ளிலும், லஞ்சம் வாங்குவ தும்; கொடுப்பதும் குற்றம்  என விளம்பர பலகை வைக்க  கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் அந்த மனு வில், ஊழல் குற்றச்சாட்டுக்க ளுக்கு உள்ளாகும் அரசு  அதிகாரிகளின் அசையும், அசையா சொத்துக்களை முடக்க வேண்டும், அனைத்து அரசு அலுவல கங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பொதுப்படையான கோரிக்கைகளுடன், எந்த ஆய்வும் நடத்தாமல் விளம் பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இரண்டு ஆண்டு களுக்கு பொது நல வழக்கு கள் தாக்கல் செய்ய மனுதார ருக்கு தடை விதித்த நீதிபதி கள், அபராதத் தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத் தவும் உத்தரவிட்டனர்.