‘பொம்பளப் புள்ளய எப்படித் தனியா அனுப்பறது...?’ என்பது இன்றும்கூட கேட்க முடிகிற சொற்றொடர்தான்...! பெண் தனியாக வெளியே செல்வதற்கே நாம் இவ்வளவு கவலைப்படுகிறோம்! தனியாகப் பயணிக்கும் பெண்களை உற்றுப் பார்க்கிறோம்! ஆனால், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனியாக முதன்முதலில் மேற்கொண்டவர் ஓர் இளம்பெண்தான்! அதுவும் ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்பு, 1889இல்!
உலகைச் சுற்றும் பயணத்தை முதன்முதலில் மேற் கொண்டு, பயணம் நிறைவுறும் முன்பே கொல்லப்பட்டு விட்ட மெகல்லன் தொடங்கி, செல்வச் செழிப்பு, படைபலம் போன்றவற்றைக் கொண்ட அரசர்களும், அவர்களால் அனுப்பப்பட்ட தளபதிகளும் மட்டும்தான், அதுவும் பெரும் குழுவாகத்தான் அத்தகைய பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றிருந்த நிலையை முறியடித்துக் காட்டியவர் அந்தப் பெண்தான்! 19ஆம் நூற்றாண்டின்(1800களின்) தொடக்கத்தில் தொடர்வண்டி பயன்பாட்டுக்கு வந்தது. 1825இல் இங்கி லாந்தின் ஸ்டாக்டன்-டார்லிங்க்டன் ரயில்வே, 550 பயணி களை அழைத்துச் சென்று, ‘பயணிகள் போக்குவரத்து’ என்பதைத் தொடங்கி வைத்திருந்தது. தொழில்மயமான நாடுகளில், சரக்குப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட தொடர்வண்டிப் பாதைகளில், பயணி களுக்கான தொடர்வண்டிகளும் ஓடத் தொடங்கினாலும், எல்லாப் பகுதிகளை யும், நாடுகளையும் இணைக்கும் வசதி யெல்லாம் இல்லை. 1869இல் வடஅமெரிக்கக் கண்டத்தில் இக்கரையிலிருந்து, அக்கரை வரையான ரயில்பாதையை, அமெரிக்கா அமைத்து முடித்தது. அதே ஆண்டில் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய், ஆசியா-ஐரோப்பா பய ணத்தில் ஏழாயிரம் கி.மீ. தொலைவைக் குறைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில், இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்கள், இந்தியத் துணைக்கண் டத்தைக் கடக்கும் வண்ணம் பம்பாயிலி ருந்து, கல்கத்தா வரையான ரயில் பாதை களை இணைக்கும் பணியை முடித்தனர்.
இந்திய ரயில்பாதைகள் இணைக்கப் பட்டதைச் செய்தியாக வெளியிட்டிருந்த இங்கிலாந்தின் தி டெய்லி டெலிகிராஃப் இதழ், அதன் உதவியுடன் உலகைச் சுற் றிய பயணத்தையே 80 நாட்களில் மேற் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்ததாக வும், அதை கிளப் ஒன்றில் விவாதித்த செல்வந்தர்களில் ஒருவர், அப்படி முடிந் தால், முடிப்பவருக்கு 20 ஆயிரம் பவுண்டு கள்(இன்றைய இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.20 கோடி) அளிப்பதாக அறிவித்ததாக வும் குறிப்பிட்டே, ‘80 நாட்களில் உலகைச் சுற்றி’ என்ற புதினத்தை, பிரெஞ்ச் எழுத்தா ளர் ஜூல்ஸ் வெர்னி 1872இல் எழுதினார். இந்தப் புதினம் உலகம் முழுவதும் சென்றடைந்த நிலையில், அப்படியான பயணம் சாத்தியமா என்ற விவாதமும் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தது. நியூ யார்க் வேர்ல்டு என்ற செய்தித்தாளில், செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டி ருந்த, 23 வயது இளம் பெண்ணான நெல்லி பிளை, அப்படியான பயணத்தை, தான் முயற்சிப்பதாக, அந்த நிறுவனத்திடம் அனுமதி கோரினார். அப்படிக் கேட்பதற்கான தகுதியும் அவருக்கு இருந்தது. குடும்ப வறுமை காரணமாக படிப்பைப் பாதியில் விட்டவர் எலிசபெத் ஜேன் காக்ரன், பிட்ஸ்பர்க் டிஸ்பாட்ச் என்ற செய்தித்தாளில், பெண் களால் சமூகத்திற்குப் பயனில்லை என்ப தான பொருளில் வெளியான ஒரு கட்டு ரைக்கு, 16 வயதில் எழுதிய மறுப்புக் கடி தம், அதே செய்தித்தாளில் அவருக்கு முழு நேர செய்தியாளர் பணியையே பெற்றுத் தந்தது. பெண்கள் உண்மைப் பெயரில் எழுதுவது அப்போது மரபாக இல்லாத நிலையில் அவர் தேர்ந்தெடுத்த புனை பெயர்தான் நெல்லி பிளை. அப்போது புகழ் பெற்றிருந்த ஒரு பாடலிலிருந்து இதை அவர் தேர்ந்தெடுத்தார். பெண்கள் எழுதினாலும், பெண்கள் தொடர்பானவற்றை மட்டுமே எழுத வேண் டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்த அக்காலத்தில், அதை முறியடித்தவர் நெல்லி பிளை. இன்னும் ஒரு படி மேலே போய், மெக்சிகோவிற்குச் சென்று தங்கி, அம்மக்களின் மோசமான வாழ்க்கை நிலையை நேரடியாக அறிந்து, அதுபற்றி எழுதினார். ஒரு கட்டத்தில், மெக்சிகோ அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற் காகக் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்ட போதுதான் அமெரிக்காவிற்குத் திரும்பி னார்.
பிட்ஸ்பர்கிலிருந்து நியூயார்க் நக ருக்கு வந்தபின் நியூயார்க் வேர்ல்டு செய்தித் தாளில் இணைந்தவர், அக்காலத்திய மன நலக் காப்பகங்களில், நோயாளிகள் மோச மாக நடத்தப்பட்டதை வெளியில் கொண்டு வருவதற்காகவே, மனநலம் பாதிக்கப்பட் டவராக நடித்து ஒரு மனநலக் காப்ப கத்தில் சேர்ந்தார். வெறும் 21 வயதே ஆகி யிருந்த நிலையில், 10 நாட்கள் அந்த மன நலக் காப்பகத்தில் நோயாளியாகவே நடித் துத் தங்கி, அவர் வெளிக்கொணர்ந்த செய்திகள், அமெரிக்க மனநலக் காப்ப கங்களை மாற்றியமைக்க வழிகோலின. அந்த 10 நாட்கள் அனுபவத்தை அவர் எழுதிய ‘10 டேஸ் இன் எ மேட் ஹவுஸ்’ என்ற நூல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், 2015இல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இத்தகைய செயல்பாடுகளின்மூலம், டிடெக்டிவ் ஜர்னலிசம் என்ற பெயர் உரு வாவதற்கு முன்பே, பெண்களும் அத்த கைய இதழியலில் ஈடுபடுவதைத் தொடங்கி வைத்தார் நெல்லி பிளை. துணிகரச் செயல்களைச் செய்வதைக் குறிக்கும் ஸ்ட்டண்ட் என்ற ஆங்கிலச் சொல்லால் ‘ஸ்ட்டண்ட் கர்ல்ஸ்’ என்று அத்தகைய பெண் செய்தியாளர்களை அழைப்ப தற்குக் காரணமாக அமையுமளவுக்கு நெல்லி பிளையின் பணி தீரமிக்க செய்தி யாளராக செயல்பட்டார்.
இவ்வளவு சாதனைகளையும் செய்தி ருந்தாலும், உலகைச் சுற்றிப் பயணிக்க ‘தனியாக ஒரு பெண்ணை எப்படி அனுப்பு வது’ என்ற தயக்கமே, நியூயார்க் வேர்ல்டு இதழில் ஆசிரியரையும் தடுத்தது. 80 நாட்க ளில் பயணம் சாத்தியமல்ல என்ற அவ நம்பிக்கையும் அவருக்கு இருந்தாலும், முதன்மையாக இருந்தது, பெண்ணை அனுப்பினால் துணைக்கு இரு ஆண் களையாவது அனுப்ப வேண்டும் என்பது தான். அதனால், யாராவது ஆண் செய்தி யாளரை அனுப்புவதாக அவர் பதிலளிக்க, கோபித்துக்கொண்டு திரும்பிவிட்டார் நெல்லி பிளை. இரண்டு ஆண்டுகள் கழித்து நெல்லி பிளையை அழைத்த ஆசிரியர், இரண்டு நாட்களில் பயணத்திற்குத் தயா ராகும்படிக் கூறியதை, பிளையால் நம்பவே முடியவில்லை. அதிலும், 80 நாட் கள் எடுத்துக்கொள்ளாமல், 75 நாட்களில் உலகைச் சுற்றிவந்துவிட வேண்டும் என்பது பிளையின் ஆசையாக இருந்தது. பெண்கள் பயணம் சென்றால் ஆடை, அணிகலன்களுக்காக மட்டுமே பல பெட்டிகளை எடுத்துச் செல்வார்கள் என்பதுதான் அன்றைக்கிருந்த நிலை! கப்பலில் ஏறச் சென்ற பிளையிடம், பெட்டி களை எடுத்துச் செல்வதில் உதவுவதாக மற்றொரு ஆண் செய்தியாளர் கூறிய போது, இதுதான் என் மொத்த சுமை என்று கையிலிருந்த ஒற்றைப் பையைக் காட்டி அதிர வைத்தார் பிளை. மாற்றிக் கொள்ள கொஞ்சம் ஆடைகள், எழுதுவ தற்கு குறிப்பேடு, பேனா, மை போன்றவை மட்டுமே அந்தப் பெட்டியிலிருந்தன. அத்து டன் செலவுக்கு இங்கிலாந்து நாண யங்களும் எடுத்துக்கொண்டார். ஆம்! அன்றைக்கு உலகின் பெரும்பகுதியிலும் ஏற்கப்பட்டது இங்கிலாந்து நாணயம் தான்! அக்காலத்தில் உலகின் பல நாடு களுக்கு அறிமுகம்கூட ஆகியிருந்திராத அமெரிக்க டாலர் உலகைக் கைப்பற்றியது இரண்டாம் உலகப்போரில் ஆயுதம் விற்றுத்தான்!
பயணம் தொடங்கியதுமே, கப்பல் பயணத்தில் ஏற்படும் சீ-சிக் எனப்படும் குமட்டல், மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டாலும் துவண்டுவிடவில்லை பிளை. இங்கிலாந்தில் தரையிறங்கி, தொடர்வண்டியில் பயணித்து, படகுப் பய ணமாக பிரான்சை அடைந்தவர், பய ணத்தில் தாமதம் ஏற்படும் என்றாலும், புதி னத்தை எழுதிய ஜூல்ஸ் வர்னியை அங்கு சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. அவரது வாழ்த்துக்களுடன் பயணத்தைத் தொடர்ந்த பிளை, தொடர்வண்டிகள், கப்பல்கள் மட்டுமின்றி, இடையிடையே அவை இல்லாத பகுதிகளில், கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணித்தார்.
இந்தியத் துணைக்கண்டத்தைக் குறுக்காகக் கடக்கும் பாதையே ‘80 நாளில் உலகைச் சுற்றி’ என்பது எழுதப்பட அடிப்படையாக அமைந்தா லும், அந்தப் பயணம் தாமதத்தை ஏற்படுத்தும் என்று கருதிய பிளை, கப்பலிலேயே கொழும்பு வை அடைந்து, இந்தியாவைத் தொடாமலே பய ணத்தைத் தொடர்ந்தார். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பிளைக்கு பய ணத்தில் மொழி பெரிய பிரச்சனையாக இல்லை. ஏனென்றால், பிளை கால் பதித்த துறைமுகங் களில் பெரும்பாலானவை இங்கிலாந்துப் பேரர சின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. உண்மை யில், பிளை உறங்கச் சென்ற, கண் விழித்த பெரும்பாலான தருணங்களில், இங்கிலாந்துப் பேரரசிற்குள்ளேயே இருக்க நேர்ந்தது, கதிர வன் மறையாத நாடு என்று அவர்கள் பேசிய தற்பெருமையை உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், அத்தகைய நாடுகளின் வளங்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு கொள்ளையிட்டிருந் தார்கள் என்பதையும் தன் குறிப்புகளில் பிளை பதிவுசெய்யத் தவறவில்லை.
80 நாட்களில் உலகைச் சுற்றிப் பயணித்துக் காட்டுவதுதான் இலக்கு என்பதால், எந்த நாட்டி லும் தங்கவோ, சுற்றிப் பார்க்கவோ நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனாலும், உடனடியாகப் புறப் படும் கப்பலைவிட, வேகமாகச் செல்லும் கப்ப லில் பயணிப்பதுதான் இலக்கை நிறைவேற்ற உத வும் என்பதற்காக, சில இடங்களில் ஒன்றிரண்டு நாட்கள் தங்கியபோது, அந்த நாடுகளில் வாய்ப்பி ருந்த பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, பதிவு செய்தார் பிளை. கடற்பயணங்களை காலநிலை மாற்றங்கள் பெரிதும் பாதிக்கும் என்பதால், அப்படி ஓயாமல் பயணித்தாலும், தாமதங்களைத் தவிர்க்க முடி யாது என்பதுதான் அன்றைய எதார்த்தம். அமெ ரிக்காவின் கிழக்குக் கரையில் நியூயார்க்கிலி ருந்து தொடங்கிய பயணத்தை, மேற்குக் கரை யில் சான் பிரான்சிஸ்கோவில் இறங்கி, ரயிலில் பயணித்துத்தான் முடிக்க வேண்டியிருந்த நிலை யில், திட்டமிட்டதைவிட இரண்டு நாட்கள் தாம தமாகத்தான் சான் பிரான்சிஸ்கோவை அடைய இயற்கை வழிவிட்டது.
அது மட்டுமல்ல. அமெரிக்க தொடர்வண்டி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தனியாக, தனி யாருக்குச் சொந்தமானவையாக இருந்த நிலை யில், பல ரயில் பாதைகளை பனி மூடியதால், பெரும்பாலான நிறுவனங்கள் ரயில்களை ரத்து செய்துவிட்டன. அதன்பின் பயணிக்கும் வாய்ப்பே கேள்விக்குறியாகிவிட, எங்கே 80 நாட்களில் முடிப்பது? ஆனால் நடந்தது வேறு! பிளை பணியாற்றிய நியூயார்க் வேர்ல்டு இதழ், புலிட்சர் பரிசை உருவாக்கிய மிகப்பெரிய இத ழியலாளரான ஜோசஃப் புலிட்சருக்குச் சொந்த மானது! பிளை பயணிப்பதற்காக, ஒரு சிறப்பு தொடர்வண்டியையே தனியாக வாடகைக்கு ஏற்பாடு செய்துவிட்டார் புலிட்சர். ஒரு செய்தியா ளருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலகின் முதல் சிறப்பு ரயில், மிஸ் நெல்லி பிளை ஸ்பெஷல் என்ற பெயரில், அதுவரை இல்லாத அளவில் மிக வேக மாகப் பயணித்து(சராசரியாக மணிக்கு 60 கி.மீ.!), அமெரிக்க தொடர்வண்டிகளின் வேகத்திலும் புதிய சாதனையைப் படைத்தது. பிளை பயணத்தைத் தொடங்கியபோதே, அவர் எப்போது திரும்புவார் என்று கணிக்குமாறு ஒரு போட்டியை நியூயார்க் வேர்ல்டு அறிவித்து விட, அமெரிக்கா முழுவதும் பிளை பயணத்தின் புகழ் பரவிவிட்டது. போட்டி செய்தித்தாளான காஸ்மோபொலிட்டன், பிளை புறப்பட்ட அன்று மாலையில், எலிசபெத் பிஸ்லேண்ட் என்ற 28 வயதுப் பெண்ணை போட்டிப் பயணமாக, மேற்கு நோக்கி, எதிர்த்திசையில் அனுப்பிவிட்டது. அதனால், அமெரிக்கா முழுவதும், இது ஒரு பந்தயம்போலவே, யார் முதலில் வருவார்கள் என்ற பரபரப்பை உருவாக்கியிருந்தது. 1889 மேயில் (தற்போதைய) உஸ்பெகிஸ்தான் பகுதி யில் உருவாகி, வேகமாகப் பரவிக்கொண்டிருந்த இன்ஃப்ளூயன்சா காய்ச்சலைப் பற்றிய செய்தி யை, மற்றோர் அமெரிக்க இதழ், ‘நெல்லி பிளையைவிட இன்ஃப்ளூயன்சா வேகமாகப் பயணிக்கிறது’ என்று தலைப்பிடும் அளவுக்கு பிளை புகழ்பெற்றிருந்தார். (இந்தக் காய்ச்சல் அப்போது இன்ஃப்ளூயன்சா என்று குறிப்பி டப்பட்டாலும், தற்போது அதுவும் கொரோனா வின் ஓர் வடிவம் என்ற கருத்து உருவாகியுள் ளது என்பது தனிச் செய்தி!)
இதெல்லாம் தெரியாத பிளைக்கு, அமெரிக்க மண்ணில் கால் பதித்ததும் அளிக்கப்பட்ட வர வேற்பு வியப்பை ஏற்படுத்தியது. அது மட்டு மல்ல, சுங்கத்துறை அலுவலர்கள், தொடர் வண்டி நிறுவன அலுவலர்கள் என்று முக்கிய அலுவலர்கள் அனைவரும் பிளையுடனேயே வந்து, அவருடைய சிறப்பு தொடர்வண்டி புறப் படும் வரை கவனித்துக்கொண்டனர். தொடர் பண்டி கடந்த ஒவ்வொரு நிலையத்திலும் மக்கள் திரண்டு நின்று, பிளைக்கு வாழ்த்துத் தெரிவித்த னர். கான்சாஸ் மாநிலத்தின் தலைநகரில் தொடர் வண்டி நின்றபோது, சுமார் பத்தாயிரம் பேர் பிளையை வாழ்த்த குவிந்திருந்தனர். இது அந்நக ரின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு! சிக்காகோ வரை சிறப்பு வண்டியில் பய ணித்து, அதன்பின் ஒரு பயணிகள் தொடர்வண்டி யில் பயணித்த பிளையை வரவேற்க ஃபிலடெல்ஃபியா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிளையின் தாயாரும் அவருக்காகக் காத்திருக்க, நெகிழ்ந்தேபோனார் பிளை. தொடர்ந்து பய ணித்த பிளை, 72 நாட்கள், 6 மணி, 11 நிமிட நேரத்தில் பயணத்தை நிறைவு செய்தபோது, அவரை வரவேற்க ஜெர்சி நகர மேயரே வந்தி ருந்தார். தொடர்வண்டி நிலையத்திற்குள் குவிந்திருந்தவர்கள் மட்டும் 15 ஆயிரத்துக்கும் அதிகம்! போட்டிக்கு அனுப்பப்பட்ட பிஸ்லேண்ட, இதற்கு 3 நாட்கள் கழித்துத்தான் பயணத்தை முடித்தார் என்பது தனிக்கதை!
இந்தப் பயணத்தை விவரித்து, ‘72 நாட்களில் உலகைச் சுற்றி’ என்ற தலைப்பில் பிளை எழுதிய நூலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நியூ யார்க் வேர்ல்டு இதழின் விற்பனையும் பல மடங்கு உயர்ந்தது. இவற்றிலிருந்தும், பயணத்தை யொட்டி நடத்தப்பட்ட போட்டிகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் ஏராளமான கூடுதல் வரு வாய் கிடைத்தாலும், பிளைக்கு ஊதிய உயர்வோ, கூடுதலாக ஒரு போனசோகூடத் தரப்படவில்லை. அதனால் அந்நிறுவனத்தைவிட்டு வெளி யேறிய பிளை, நிதித் தேவைகளைச் சமாளிக்க பயணத்தைப் பற்றிய உரையைப் பல ஊர்களி லும் நிகழ்த்தினாலும், வாழ்க்கைக்குரிய நிதி யின்றி சிரமப்பட்டார். அதனால், 31 வயதான போது, 73 வயது தொழிலதிபர் ஒருவரை மணந்த பிளை, அவரது தொழிற்சாலைகளை சிறப்பாக நிர்வகித்தார். அந்த நிறுவனத்திற்காக, அடுக்கக் கூடிய குப்பைத்தொட்டி, புதியவகை பால் கேன் போன்றவற்றையும் அவரே உருவாக்கி காப்பு ரிமை பெற்றார். அமெரிக்காவில் இன்றும் பயன் பட்டிலிருக்கிற எண்ணெய் பீப்பாயையும் அவர் தான் வடிவமைத்ததாகக்கூட கூறப்படுகிறது. அதாவது, உலகைச் சுற்றினாலும், விடாது துரத்திய வறுமையை எதிர்க்க, கால்பதித்த அனைத்துத் தளங்களிலும் சாதனை படைத்தார் நெல்லி பிளை! வறுமையில் பிறந்து, பெண்களாலும் ஜர்னலி சம் மட்டுமல்ல, ‘டிடெக்டிவ் ஜர்னலிசமே’ செய்ய முடியும் என்று காட்டி, தனியாகவே உலகையும் சுற்றி வந்து, புதிய பொருட்களை வடிவமைப்ப தையும் செய்த நெல்லி பிளையின் வாழ்க்கை, ‘பொம்பளப் புள்ளைய எப்படி....’ என்ற வாதங்க ளின் மீது அடிக்கப்பட்ட மரண அடி என்றால் மிகையில்லை!