நாகப்பட்டினம், அக்.10- நாகப்பட்டினம் மாவட்டம் கோபுராஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் பட்டி யலினப் பெண் சமைக்கக் கூடாது என்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் பேச் சால் அப்பகுதி பரபரப்புக்கு உள்ளாகி இருக்கி றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோபராஜபுரம் ஊராட்சியில் செயல் பட்டு வருகிறது அங்கன்வாடி மையம். இதில் அப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற் பட்ட அனைத்து தரப்பு குழந்தைகளும் உண வுண்டு வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில் சமையலர் பணியிடம் காலியாக உள்ளது. கடந்த 6 மாத காலமாக மகேஸ்வரி க/பெ ஜோதிபாசு என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் உமா மகேஸ்வரி என்பவரின் கணவர் ரமேஷ் என்பவர் பட்டிய லினத்து பெண்கள் சமைக்கக் கூடாது என்று அந்த மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியரான நீலாம்பாளிடம் செல்போனில் பேசி உள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மகேஸ்வரி காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசி யுள்ளார். திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி மற்றும் அங்கன்வாடி மைய ஊழியரான நீலாம்பாள் ஆகியோருக்கு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பு கள் உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்று செயல்பட்டு வருகின்றது.