வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவ ராக பதவி வகித்து வரும் பாலச்சந்திரன், பிப்.28 ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, புதிய தலைவராக விஞ்ஞானி அமுதா மார்ச் 1 ஆம் முதல் பொறுப்பேற்கிறார். இவர் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடகிழக்கு பருவமழை தொடர்பான தரவுகளை ஆராய்ந்து, அதில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப் பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வானிலை ஆய்வு மையத்தில் பணிக்கு சேர்ந்த இவர், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை சென்னை குயின் மேரிஸ் கல்லூரி யில் பயின்றவர்.