tamilnadu

img

கையூர் தியாகிகளின் நினைவுகள் அழிவதில்லை!

1940களில் சென்னை மாகா ணத்தின் ஒரு பகுதியாக இருந்த மலபார் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாறியது. இரண்டாம் உலகப் போரை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.அத னால் கம்யூனிஸ்ட்டுகள் மீது பிரிட்டி ஷாரின் அடக்குமுறை அதிகரித்தது. கையூரில் விவசாயிகள் சங்க நட வடிக்கைகளை அடக்கி ஒடுக்க கிராமத்தை போலீஸ் தாக்கியது. இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பைத் தெரி விக்க 1941 மார்ச் 28 அன்று விவசாயி கள் சங்க ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது முஸ்லிம் விவ சாயப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகச் சொல்லப்பட்ட  ஒரு  போலீஸ் கான்ஸ்டபிள் ஊர்வலத்தின் இடையே வந்தார். இதையடுத்து அங்கு நடந்த கைகலப்பில்  அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார். இதனால் முரட்டுத்தனத்திற்குப் பெயர் போன, மலபார் சிறப்பு போலீசாரின் கடுமையான அடக்குமுறைக் காலம் ஆரம்பமானது.

அக்கொலைக்காக மொத்தத்தில் 61பேர் விசாரணையில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் அப்பு, அபூபக்கர், சிறுகண்டன், குஞ்ஞாம்பு ஆகிய நான்கு இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. அந்த நால்வரும் 25 வயது கூட நிரம்பாதவர்கள். அந்த இளம் தோழர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சி, கிசான் சபா ஆகியவை அவர்களது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆனாலும் கையூர் தோழர்களின் மரண தண்டனை தவிர்க்க முடியாததாகிவிட்டது. கண்ணூர் மத்தியச் சிறையிலே மார்ச் 29 ஆம்தேதி காலை அப்பு, அபூபக்கர், சிருகண்டன், குஞ்ஞாம்பு ஆகிய நால்வரும் தூக்கிலி டப்பட்டனர். முந்தைய இரவிலே புரட்சிக் கீதங்களிலே லயித்திருந்தனர். ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர்.  அவர்களின் தீரச் செயல் என்றும் நினைவுகளில் நிலைத்திருக்கும்.

பெரணமல்லூர் சேகரன்

(மார்ச் 29: கையூர் தியாகிகள் நினைவு நாள்)