tamilnadu

img

கோவிட்: கேரளத்தில் பாதிப்பு 10,000-ஐ கடந்தது

திருவனந்தபுரம், ஜூலை 17- கேரளத்தில் வியாழன்று ஒரே நாளில் 722 கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் தொடர்பு மூலம் 481 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 34 பேர் நோய் தொற்றிடம் தெரியாதவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த 157 பேரிடமும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 62 பேரிடமும் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதுவரையிலான நோயாளிகள் எண்ணிக்கை பத்தாயிரம் கடந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் வியாழனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சுகாதார ஊழியர்கள்-12, பிஎஸ்எப்-5, ஐடிபிபி வீரர்கள் 3 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டது. திரிச்சூர் தம்புரான்படியைச் சேர்ந்த அனீஷ், கண்ணூர் முகம்மது ஸலீ ஆகியோர் உயிரிழந்தனர். இதில் அனீஷ் சென்னையில் ஏர் கார்கோ ஊழியராக பணியாற்றி வந்தார். ஸலீ அகமதாபாத்திலிருந்து வந்தவர். 228 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16052 மாதிரி கள் பரிசோதனை செய்யப்பட்டன. இது வரை 2,68,128 பேரது மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டன. 7797 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. முன்னுரிமை பிரிவி னரின் 85767 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 81543 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என உறுதியானது. 1,82,900 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 5432 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். வியாழனன்று மட்டும் 804 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 5372 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மாநிலம் முழுவதும் 271 ஹாட்ஸ்பாட்டு கள் உள்ளன. தற்போது 10 பெரிய கம்யூனிட்டி கிளஸ்டர்கள் உட்பட மொத்தம் 84 கிளஸ்டர்கள் உள்ளன. கவனத்திற்கு வராத நோய் பரவல் நடக்கும் இடங்களும் மாநிலத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அனைத்து இடங்களிலும் நோயாளிகள் இருப்பதாக நினைத்து மக்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். கை கழுவுதல், முக கவசம் அணிதல் போன்றவை முறையாக கையாள்வது தொடர வேண்டும். நோய் தொற்றுக்கு உள்ளாவோர் மற்றும் அவர்களது குடும்பங்களை சமூக ரீதியாக விலக்கி வைக்காமல் கவனிக்க வேண்டும். தேவையான உதவிகள் செய்ய வேண்டும். சந்தைகள் மற்றும் வணிக வளாகங்க ளை மையமாக கொண்டு நோய் பரவுகிறது. பொது மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் செல்லும் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்கவும், தேவைப்படு பவர்களைப் பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பிரேக் தி செயின் பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.