tamilnadu

முதுபெரும் தோழர் சாத்தன் காலமானார்

 மதுரை, மே 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் அய்யாவு  என்ற சாத்தன் (74) செவ்வாயன்று காலமானார். தோழர் சாத்தன் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துந ராக பணியாற்றியவர். சிஐடியுவில் இணைந்து தீவிரமாக  செயல்பட்டவர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.  பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், மதுரை புதூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பக்குளம் கிளைச்  செயலாளராக பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய வார்டு 27-ல் சிபிஎம் வேட்பாளராக  அவரது மகள் மணிமேகலை போட்டியிட்டார். அவரது சொந்த ஊரான மாயாண்டிபட்டியில் 1969 ஆம்  ஆண்டு பி.சி.எம். பண்ணை முதலாளியார் குத்தகை விவசாயி களை நிலவெளியேற்றம் செய்வதை எதிர்த்து கே.பி.ஜானகி அம்மாள் தலைமையில் நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கு  வகித்தவர். அதன் மூலம் ஏராளமான விவசாயிகளின் குத்தகை  உரிமை பாதுகாக்கப்பட்டது.

அத்துடன் அந்தப் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வந்த அவர், செவ்வாயன்று காலமானார். அவரது இறுதி நிக ழ்ச்சி புதனன்று காலை 10 மணியளவில் அவரது சொந்த ஊரான மாயாண்டிபட்டியில் நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியில் தீக்க திர் செய்தி ஆசிரியர் ப.முருகன், சிபிஎம் புறநகர் மாவட்ட செய ற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன் மற்றும் தோழ ர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் புறநகர் மாவட்டச் செயலா ளர் சி.ராமகிருஷ்ணன், புதூர் - அண்ணாநகர் பகுதிக் குழுச்  செயலாளர் டி.குமரவேல் மற்றும் சிஐடியு மாநில- மாவட்ட நிர்வாகிகள் வி.பிச்சை, ஜி. ராஜேந்திரன், கனகசுந்தரம், மகா லிங்கம், வாசுதேவன், நடராஜன், கனகராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த தோழருக்கு மனைவி பாக்கி யம், மகள் மணிமேகலை, மகன்கள் ஜோதிபாசு, செந்தில் என்ற  ராமமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.