tamilnadu

img

ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு உறுதுணையாக இருக்கும்

சென்னை, மே 30- ஆசிரியர்களுக்கு இந்த அரசு என்றும் துணையாக இருக்கும் என்று  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாநிலத் தலை வர் கு.தியாகராஜன் தலைமையில் திங்களன்று (மே 29) நடைபெற்றது. இதில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, முன்னாள் பொதுச் செயலாளர் என்.ரமேஷ் எழுதிய பாடலை அமைச்சர்கள் வெளியிட்ட னர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பேசு கையில், ஆசிரியர்களை மதிக்கும் இயக்கம் திராவிட இயக்கம். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை 2006ஆம் ஆண்டு கால முறை ஊதியத்துக்கு கொண்டு வந்தது கலைஞர்தான். 652 ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய ப்பட்டது. ஆசிரியர் பணி மாறுதல் வெளி ப்படையாக கவுன்சிலிங் முறைப்படி நடைபெற்றது என்றார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுளுக்கும் அது செல்லும் என்று முதல்வர் அறிவித்தார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி 600 மதிப்பெண் பெற்றதற்கும், மாற்றுப் பாலின மாணவி சாதனை படைத்த தற்கும்  காரணம் ஆசிரியர்கள்தான். இவற்றை மனதில் வைத்துத்தான் ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் நலன் காப்பதில் அரசு எப்போது துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். முன்னதாக மாநிலச் செயலாளர் தி.அருள்குமார் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் உதயகுமார் நன்றி கூறி னார்.