tamilnadu

img

தூர்வாரப்படாத நீர்நிலைகளால் மழைநீரை வீணாக்கப்போகும் அரசு தண்ணீர் தனியார்மயமாகும் அவலம் - பரிதவிக்கப் போகும் மக்கள்

மதுரை, மே 30-தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில்,மக்கள் காலிக்குடங்களுடன் வீதிவீதியாய் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை நிலவுகிறது. தண்ணீர் தேக்கிவைக்கப்படும் நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள் மற்றும்  வரத்துக் கால்வாய்களை தமிழக அரசு சரியாக தூர்வாரவில்லை என்று பொது மக்களும் விவசாயிகளும் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள்அடர்ந்தும் புதர் மண்டியும் குப்பைகள் நிறைந்தும்காணப்படுகின்றது. வரத்துக் கால்வாய்களில் கான்கிரீட் தளம் போடப்பட்டதால் மழைநீர்  நிலத்துக்கு அடியில்  செல்ல முடியவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம்  வெகுவாக குறைந்து வருகின்றது. ஆற்றுப் படுகைகளில் அரசு அதிகாரிகளின் உதவியுடன் நடைபெறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது. நகரங்கள் விரிவாக்கத்திற்கு ஏற்றாற்போல் சிறு காடு களையும், சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில்நிழல் தரும் மரங்களையும் வெட்டுவதால் காற்றில் ஈரப்பதம் குறைந்து அனல் காற்று  ஆளைக் கொல்லும் அளவிற்கு வீசுகிறது.கடந்த ஆண்டு பெய்த மழை சராசரி அளவை விட அதிகமா அல்லது குறைவா என்று அலசி ஆராயப்பட்டு வானிலை துறை சார்பில் விரிவான அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான தென்மேற்குப் பருவ மழையின் அளவு 28 செ.மீ. இது சராசரி அளவை விட 12 சதவீதம் குறைவு என்றும் வடகிழக்கு பருவமழையில் பதிவான அளவு 34 செ.மீ.இது சராசரியை விட 24 சதவீதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின் அளவு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மழைப்பொழிவு, பற்றாக்குறை அல்லது மிகப்பற்றாக்குறை என்ற அளவில் பெய்துள்ளது. எனவே அந்தப் பகுதிகளை வறட்சி வட்டாரங்களாக அறிவித்துள்ளனர்.மேலும் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.மழை பெய்தாலும் அந்த மழை நீரை சரியான முறையில் தேக்கி வைத்திட ஏற்பாடுகள் உள்ளதா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் பெய்த மழைநீரை தேக்கி வைத்திட நடவடிக்கை எடுத்திருந் தால் ஓரளவிற்கு கோடை காலத்தினை சமாளித்திடமுடிந்திருக்கும். இன்றைக்குவரை அந்த நடவடிக்கை  இல்லை என்பதே பெரும் குற்றச்சாட்டாகஉள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் என்று அனைத்தும் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய் உள்ளது, மழை  பெய்தால் கண்மாய்கள் நிரம்பாமல் மறுகால்பாய்ந்து விடுகின்றது. கடந்த ஆண்டு இறுதியில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. ஆனால் இந்த மழை நீரைசேகரிக்கும் வகையில் மதுரை சுற்றுப் பகுதி களில் உள்ள  கல்லுப்பட்டி, செல்லூர், ஆனையூர், ராஜாக்கூர், வண்டியூர் என்று பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் சரியான முறையில்  தூர்வாரப்படாமல் அதிக அளவிலான மழைநீர் வீணாக வெளி யேறியது. அரசு முறையாக நீர் நிலைகளை பரா மரிக்கவில்லை என்றால் இந்தாண்டுமட்டுமல்ல வரும் ஆண்டுகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பதே உண்மை. நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும், குடிநீர் பற்றாக்குறையினை போக்கிட வேண்டுமென்றால் அரசு செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை, நீர்நிலை களை முறையாக தூர்வாருவதுதான்.  ஆனால் அரசோ தண்ணீரை தனியார்மய மாக்கும் நிலைக்கு மாறிவருகின்றது. மதுரை மாவட்டத்தில் இன்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல்வேறு பகுதிகளில் லாரிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றது. கோவையைப் போல் மதுரை மாநகராட்சியும் குடிநீர் விநியோ கத்தை தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விடும் முயற்சியில் உள்ளது. மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இதுபோன்ற அத்தியா வசியமான அடிப்படை பிரச்சனைகளை யாரிடம் போய் முறையிட்டு தீர்வுகாண்பது என்று மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள். குடிநீர் பிரச்சனைக்கு அரசு தீர்வுகாண வில்லையென்றால் மக்கள் காலிக்குடங்களுடன் மதுரை வீதிகளிலும் சாலைகளிலும் கோபத்துடன்அணிதிரள்வார்கள் என்பது மட்டும் உண்மை. ஜெ.பொன்மாறன்