புரட்சியின் பெருவெள்ளம் மதுரையில்! வரலாற்றுப் பெருமையின் அடுத்த அத்தியாயம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை எழுச்சியுடன் நடைபெற இருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் குரலாக, உழைக்கும் மக்களின் உறுதுணையாக திகழும் இந்த வரலாற்று மாநாட்டுக்கு மதுரை மாநகரம் சிவப்புக் கொடி களால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டு துடிப்புடன் காத்திருக்கிறது! புரட்சிகர மண் மதுரையின் இதயமாகத் திகழும் தமுக்கம் மைதானத்தில் இந்த வர லாற்றுச் சிறப்புமிக்க மாநாடு நடைபெறுகிறது. இதே மண்ணில், இதே தமுக்கம் மைதா னத்தில்தான் 1953-இல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடும், 1972ஆம் ஆண்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9ஆவது அகில இந்திய மாநாடும் நடைபெற்றது. இப்போது 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறு வதன் மூலம், இந்தியாவிலேயே மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை நடத்தும் பெரு மைக்குரிய நகரமாக மதுரை உயர்கிறது!
சிவப்புக் கொடிகளின் அலைகள்
புரட்சிகர நகரங்களில் ஒன்று” என்று வர்ணிக்கப்பட்ட மதுரைக்கு மீண்டும் ஒருமுறை அந்தப் பெருமை சூட்டப்படுகிறது. தெருக்கள் தோறும் சிவப்புக் கொடிகள் அலைபாய, பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை உணர்த்தும் சுவரொட்டிகள் பளிச்சிட, மதுரை மாநகரமே பாட்டாளி வர்க்கத்தின் கோட்டை யாக மாறிவருகிறது! மதுரை மாநகர், புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த போராளித் தோழர்கள், அருகிலுள்ள மாவட்டங்களின் உணர்வுப்பூர்வ தோழர்கள் அனைவரும் நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை வரவேற்க துடிப்புடன் காத்திருக்கின்றனர். அவர்களின் கண்களில் தெரிவது புரட்சி நெருப்பு! இதயத்தில் துடிப்பது மக்களுக்கான அர்ப்பணிப்பு!
தோழர்களின் அயராத உழைப்பு
இந்த மாநாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களைக் கொண்டு அமைக் கப்பட்ட பிரமாண்டமான வரவேற்புக் குழு அயராது உழைத்து வருகிறது. கே. பால கிருஷ்ணன் (மத்தியக்குழு உறுப்பினர்) தலை வராகவும் சு.வெங்கடேசன் எம்.பி., (மாநில செயற்குழு உறுப்பினர்) செயலாளராகவும், மதுக்கூர் ராமலிங்கம் பொருளாளராகவும் இந்தப் பிரமாண்டப் பணிகளை வழிநடத்து கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகிய அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக்கான பயணத்தில் ஒவ்வொரு அடியும் கவனமாக, அக்கறையுடன் திட்டமிடப்பட்டுள்ளது!
புரட்சிகரப் பேரணி - மக்கள் வெள்ளம்
மாநாடு நிறைவுபெறும் ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கும் அணிவகுப்பு மிகப் பிர மாண்டமானதாக இருக்கும்! 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்றிணைந்து, சிவப்புக் கொடிகளை ஏந்தி, புரட்சிப் பாடல் களை முழங்கி, மதுரை நகரத்தின் வீதிகளை அதிரவைக்கவிருக்கும் காட்சி மறக்க முடியாத தாக இருக்கும்! இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற இருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர்களான பிரகாஷ் காரத், பினராயி விஜயன் உள்ளிட்ட மாபெரும் தலை வர்கள் உரையாற்றுவார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் மனங்க ளில் புரட்சி நெருப்பை ஏற்றும்!
மக்களுடன் இணைந்த நிதிதிரட்டும் இயக்கம்
இந்த மாநாட்டின் மிகப்பெரிய சிறப்பம்சம் - இது மக்களுடன், மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மாநாடு! கட்சியின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை எளிய உழைப்பாளி மக்கள், நடுத்தர வர்க்க மக்களிடம் இருந்து அன்புடன் திரட்டி வருகின்றன. வீடு வீடாகச் சென்று, நெஞ்சில் நம்பிக்கை நெருப்பை ஏந்தி, கட்சியின் தலைவர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைத்து தோழர்களும் மக்களிடம் உண்டியல் ஏந்தி நிற்கும் காட்சி மனதை நெகிழவைக்கிறது. மக்களின் ஆதரவுக் கரங்கள் இந்த மாநாட்டின் அடித்தளமாகத் திகழ்கின்றன! குடும்ப உண்டியல் திட்டம் மூலம் ஒவ்வொரு தொண்டர் குடும்பமும் புரட்சியின் ஒரு சிறு பாகமாக மாறியுள்ளது. குடும்பத்திலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் தங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை வழங்கி மகிழ்கின்றனர். புரட்சியின் விதை கள் ஒவ்வொரு குடும்பத்திலும் விதைக்கப் பட்டுள்ளன! நவ
பாசிசத்திற்கு எதிரான போர்க்குரல்
இன்றைய அரசியல் சூழலில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மாநில சுயாட்சிக்கு கடும் சவால் விடுகிறது, நாடாளுமன்ற ஜன நாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது, வக்பு வாரியம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை முடக்குகிறது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மொத்தத் தில் நாடு முழுவதும் நவ பாசிச போக்குகள் தீவிர மடைந்துள்ளன. இந்த சூழலில், மக்களின் உரிமைக ளுக்காக குரல் கொடுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும், பாசிசத்தை முறியடிக்கும் உறுதி யான குரலாக இந்த மாநாடு அமைய இருக்கி றது. மக்களை ஒன்றிணைக்கும், புதிய நம்பிக்கை ஊட்டும் கலங்கரை விளக்கமாக இந்த மாநாடு திகழும்!
அறிவொளி பரப்பும் கருத்தரங்குகள்
24ஆவது மாநாட்டை குறிக்கும் விதத்தில் 24 சிறப்பு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப் பட்டு, மக்களிடையே புரட்சிகர சிந்தனைகளை விதைத்து வருகின்றன. ஒவ்வொரு கருத்த ரங்கும் ஒரு தீப்பொறியாக, எதிர்காலத்திற்கான தீர்வுகளை முன்வைக்கின்றன. இந்த கருத்தரங்குகளில் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், உ.வாசுகி, கே. பால கிருஷ்ணன், கேரள அமைச்சர் பி.ராஜீவ், டாக்டர் விஜூ கிருஷ்ணன், ஆர். கருமலையான், மாநில செயலாளர் பெ. சண்முகம், பி. சம்பத், ஜான் பிரிட்டாஸ் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் எழுச்சிகரமான சொற்களால் மக்களை விழிப்ப டையச் செய்தனர்.
அறிவின் ஆயுதம் - ஊடகப் பிரச்சாரம்
கட்சியின் குரலாக ஒலிக்கும் தீக்கதிர் நாளிதழ் கடந்த இரண்டு மாத காலமாக மாநாட்டுச் செய்திகளை, தத்துவார்த்த கருத்துக்களை, கம்யூனிஸ்ட் கட்சியின் வர லாற்று ஆவணங்களை, முன்னைய 23 மாநாடுகளின் வரலாற்றுத் தொகுப்புகளை பதிவு செய்து வருகிறது. அறிவின் ஆயுதங்க ளால் மக்களை ஆயுதபாணியாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புரட்சியின் விடியல்
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) தோழர்கள் இரவு-பகலாக உழைத்து, இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கண்களில் தெரிவது சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் கனவு! மதுரை உங்களை எழுச்சியுடன் வர வேற்கிறது! புரட்சியின் பெருவெள்ளம் மதுரை யில் பெருக்கெடுக்க இருக்கிறது! சிவப்புக் கொடிகள் உயர்ந்து பறக்கட்டும்! மக்களின் குரல் முழங்கட்டும்! புரட்சி வாழ்க!