தேர்வு மையம் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. சிலர் பதட்டத்துடன் காணப்பட்டனர். ஹால் டிக்கெட் கொண்டு வராமல் இருவர் எப்படிப் போய் எடுத்து வருவது என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். விண்ணப்பிக்கும்போது தாலுகா என்ன என்று கேட்டு, அந்தத் தாலுகாக்குள் மையம் வருமாறுதான் போடப்பட்டிருந்தது. மீண்டும் வீட்டுக்குச் சென்று எடுத்து வருவது கூட சாத்தியம்தான். அந்த இருவரின் வீடுகளில் இருந்து ஹால் டிக்கெட் வந்து சேர்ந்தது.'
ஓரிரண்டு பேர் தாமதமாக வந்து மையத்தின் இரும்புக் கதவுகளை உலுக்கினார்கள். எல்லாரும் உள்ளே சென்ற பிறகு, அப்பகுதி சிறிது நேரம் அமைதியாக இருந்தது. பின்னர், தேர்வர்களோடு வந்தவர்கள் தங்களுக்குள் பேசத்துவங்கினர். ஒரு அம்மா, பக்கத்தில் இருந்த பெண்மணியிடம், “இந்த தடவை வினாத்தாள் கஷ்ட மாத்தான் இருக்குமாம்..” என்றார். அந்தப் பெண்மணி, புருவத்தை உயர்த்தி, “அப்படியா” என்றார். “என் பொண்ணுதான் சொன்னா... கஷ்டமா இருந்தா தான் நல்லதாம். கஷ்டப்பட்டு படிக்குறவங்க நல்லா எழுத முடியுமாம்.. பேப்பர் ஈசியா இருந்தா, கஷ்டப்பட்டு படிக்காதவங்க கூட நல்லா எழுதிரு வாங்களாம்..” பக்கத்தில இருந்த மற்றொரு தேர்வரின் அப்பா, அந்த உரையாடலில் கலந்து கொண்டார். இன்னும் சிலரின் பார்வையும் இவர்களை நோக்கித் திரும்பியது. “என் பையன் 100 மாதிரித் தேர்வு போட்டான்... இப்பல்லாம் அதிகமா மாதிரித் தேர்வு போட்டாதான் தேர்ச்சி பெற முடியுமாம்..” பார்வையைத் திருப்பிய சில பெற்றோர்கள் மிரண்டே போனார்கள். ஒரு தேர்வரின் அம்மா, பக்கத்தில் இருந்தவரிடம் “மாதிரித் தேர்வுனா என்ன” என்றார். அவரோ, “பரவாயில்ல... நம்ம பொண்ணு ரெண்டு, மூணு மாதிரித் தேர்வாவது போட்டுட்டுதான் உள்ள போயி ருக்கு..” என்று நிம்மதியடைந்தார். மிரண்டு போயிருந்த வரோ, மற்றவர்கள் பேசுவதைப் பாரத்துவிட்டு, ‘இவங்க ளும் பாதி படிச்சுருப்பாங்க போலருக்கே’ என்ற பெரு மூச்சு விட்டார். அவ்வப்போது பரபரப்பாகவும், பெரும்பாலான நேரம் அமைதியாகவும் கழிந்தது. உள்ளே மணிச்சத்தம் கேட்டது. “இன்னும் அரை மணி நேரம் இருக்கு” என்று அனுபவம் வாய்ந்த தேர்வரின் அப்பா சொல்லிவிட்டு, ‘தனக்கு நிறையத் தெரிந்திருக்கிறது’ என்ற பெருமைக்குரிய புன்னகையையும் வெளியிட்டார். நிறைவு பெற்றதற்கான மணி அடித்ததும் வேகமாகச் சென்று இரும்புக்கதவுகளை ஆட்டத் தொடங்கினர். வெளியில் வந்து கொண்டிருந்த தேர்வர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டே வந்தனர்.
“சீனியர்.. என்ன ஆச்சு.. உங்கள ரெண்டு நாளாப் பாக்க முடியலையே..”
குரலைக் கேட்டுத் திரும்பியவர், “என்ன தம்பி... உங்களுக்கும் இந்த சென்டர்தானா? வைரல் ஃபீவர்..”
“குரங்கம்மை இல்லேல” என்று கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தார்.
“இல்ல தம்பி... ஆனா, குரங்கம்மை பற்றிப் படிச்சுக்குங்க.. மெயின்ஸ்ல வரலாம்..”
“இன்னிக்கே படிச்சுட்டுதான் வந்தேன்.. 1958ல ஆய்வுக்காக வெச்சுருந்த குரங்குகள்ல இதக் கண்டு
பிடிச்சுருக்காங்க.. ஆனா, மனிதனுக்கு மனிதன் அவ்வ
ளவு எளிதாப் பரவாதாம்.. வந்தா 14லருந்து 21 நாள் வரைக்கும் இருக்குமாம்... தானாப் போயிரும்..”
“இந்த பாதிப்ப பொது சுகாதார அவசர நிலைனு உலக
சுகாதார அமைப்பு அறிவிச்சுருக்கு..”
“ஆமாண்ணா... இப்போ எங்க போறோம்..”
“சென்டருக்குதான்... நிறையப் பேரு வருவாங்க... வினாத்தாள்ல என்ன இருந்துச்சு... எப்புடி இருந்துச்சுனு
சூட்டோட சூடா பேசிறலாம்..”
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். எல்லாப் பேருந்தும் கூட்டமாகவே வந்தன. இரண்டு, மூன்று பேருந்து
கள் கழித்துச் செல்லாம் என்று இருவரும் காத்தி
ருந்தனர்.
ஒரு பேருந்து வந்து நின்றபோது, அதில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று எழுதியிருந்ததைத் தேர்வர் வாசித்தார். சிரிக்கவும் செய்தார்.
சீனியரோ, “எதுக்கு சிரிப்பு..?”
“இது உங்கள் சொத்துனு ஒரு காமெடி சீன் வரும்ல... அது நினைவுக்கு வந்துச்சு... அதான் சிரிச்சேன்..
உங்களுக்குத் தோணலையா..?”
“எனக்கு வேற தோணிச்சு... இந்த அரசுப் போக்கு
வரத்துக் கழகம்குற பெயர யார் வைச்சா..?”
“யார்னா..?”
“யார் முதலமைச்சர இருக்குறப்ப வெச்சாங்க?”
“ஓ.. தெரியலையே சீனியர்..”
“மு. கருணாநிதிதான் அப்போ முதலமைச்சர்... ஒன்றரை மார்க்கு நமக்கு.. இப்புடிப் பேருந்து நிறுத்தத்துல நிக்குறப்ப, தாண்டிப் போற பஸ்சப் பார்த்து
படிச்சுட்டே இருக்கலாம்..”
“எத்தனை தடவை படிக்குறது... நாலு நாள் இதயே
படிச்சா சலிச்சுருமே..”
“சலிக்கத்தான் செய்யும்... அஞ்சாவது நாள், அவர்
முதலமைச்சரா இருக்குறப்ப வேற என்ன திட்டம்
கொண்டு வந்தாருன்னு யோசி.. கண்ணொளித் திட்டம்லாம் நினைவுக்கு வரும்.. “
“இது நல்லாருக்கே.. சீனியர் நேத்து ஒரு விளம்பரம்
பாத்தேன்... அதுல மொபைல் விலை ரூ.1942னு போட்டு
ருக்கும்... அந்தப் பையன் அதப் பாத்து வெள்ளையனே வெளியேறு இயக்கம்னு சொல்வான்.. பள்ளிப் பேருந்துல ஏறி உக்காந்த பிறகு, ஒரு வீட்டு வாசல்ல 1947னு சுவத்துல நம்பர் போட்டுருக்கு... இந்திய விடு
தலைனு சொல்வான்.. பக்கத்துல இருக்குற பையன்
எங்கருந்து படிக்குறனு கேட்டா, மூளைனு சைகையால சொல்வான்..”
“ஹார்லிக்ஸ் விளம்பரம்தான...”
“சீனியர் நீங்களும் பாத்தீங்களா..”
‘ஆமாம்’ என்று அவர் தலையாட்டிக் கொண்டி
ருந்தபோதே அடுத்த பேருந்து வந்தது. இருவரும் ஏறிக்
கொண்டார்கள்.
இருக்கை காலியாக இருந்தது. அமர்ந்து கொண்ட
னர். ஆனால் அவர்களுக்கு முன்பே ஏறியிருந்த ஒருவர்
இருக்கைகளில் அமராமல் இருந்ததைப் பார்த்தனர்.
“நாங்கள்லாம் கறுஞ்சிறுத்தை.. கன் மாதிரி நிப்போம்”னு வடிவேலு சொல்லும் காட்சி இருவ
ருக்குள்ளுமே ஓடியது. சிரித்தனர்.
அப்போது அந்தக்காட்சி அரங்கேறியே விட்டது. டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்த, அந்த நபர் உருண்டே விட்டார்.
“தமபி.. இப்போ என்ன தோணுச்சு..?”
“சீன் முழுக்க பாத்த திருப்திதான் சீனியர்..”
“அதான் இல்ல... இயக்கததின் நிலைத்தன்மை... Inertia of motion... அதுல அவர் இருந்ததுனாலதான் இப்புடி திக்குமுக்காடிப் போயிட்டாரு..”
‘ஓ... இயக்க விதிகளப் படிச்சுடலாம்..’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே வேகத்தைக் குறைக்கா
மல் வலதுபக்கம் பேருந்து திரும்பியது. இருவரும் இடது
புறம் சாய்ந்தனர்.
சீனியரை முந்திக்கொண்ட தேர்வர், “இது திசை
யின் நிலைத்தன்மை... Inertia of Direction... சரிதான
சீனியர்..”
“ஆமாம்பா... இப்புடியே யோசிச்சுக்கிட்டே இருந்தா
போதாது... இறங்க வேண்டிய இடத்துல இறங்கவும் செய்யணும்.. வா.. வா.. அது சரி, நீ எப்புடி தேர்வு எழுதுன..?”
“இதான முத எக்சாம்... நீங்க சொன்ன மாதிரி தான்... இப்போதான் புரிஞ்சுருக்கு... அஜித் படத்துல ஒரு டயலாக் வருமே... எவ்வளவு பேரத் தூக்கு னோம்குறது முக்கியமில்ல... யாரத் தூக்கு னோம்குறதுதான் முக்கியம்னு... அது மாதிரிதான்... எவ்வளவு படிக்குறோமகுறது முக்கியமில்ல... எதைப் படிக்குறோம்குறதுதான் முக்கியம்... வகுப்பறைக்கு வெளிலதான் நிறையப் படிக்கலாமோ சீனியர்..” சீனியரின் புருவங்கள் உயர்ந்தன.