காஞ்சிபுரம், பிப். 26- விலைவாசி உயர்வு,வேலையின்மை, கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழ்நாட்டில் எட்டு முனைகளிலிருந்து மே 20 முதல் 30 ஆம் தேதி வரை நடை பயணம் மேற்கொள்ள சிஐடியு மாநிலக் குழு முடிவு செய்துள்ளது இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது:
தொழிலாளர் விரோத பட்ஜெட்
ஒன்றிய அரசின் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி, வேலையின்மை, பொருளா தாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கடுமையாக பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது. பட்ஜெட்டில் பல அடிப்படை துறை களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்தாண்டை விட இந்த ஆண்டு கடுமையாக வெட்டப் பட்டுள்ளது. சத்துணவு, அங்கன்வாடி, 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட துறை களில் நிதியை கடுமையாக குறைத்துள்ள னர். வங்கி, விவசாயம் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் வேலை யின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இது சமூகத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். உலக வங்கி, உலகப் பெரு முதலாளிகள் உட்பட கொண்டாடும் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் பிரதமர் பதில் அளிக்கவில்லை. அதே வேளையில் பிரதமரை விமர்சிப்பவர்களை கடுமையாக அடக்குமுறைக்கு ஆளாக்கி வருவதும் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. மிகக் கடுமையான பாசிசத் தன்மையுடன் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு எந்த வகை யிலும் உகந்ததல்ல. இதை சிஐடியு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
மூலப்பொருட்கள் விலை கடும் உயர்வு
இந்தியாவில் மூலப்பொருள் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது நீடித்தால் கடுமையான விலை உயர்வு ஏற்படும். தொழில் மந்தம் ஏற்படும். மூலப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று வரி கொள்கை யிலும் மாற்றம் செய்ய வேண்டும். நம் நாட்டில் மூலப் பொருட்களை தயார் செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது. பொதுத்துறைக்கு சொந்த மான ரயில், விமானம், கப்பல், சாலை போக்கு வரத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இது பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். முதலாளிகளின் கோரிக்கைகளை ஏற்று நிரந்தர பணிகள் இனி இருக்காது என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். இது உலக தொழிலாளர் ஸ்தாபனத் தீர்மானங்களுக்கு (ஐஎல்ஓ) எதிரான முடிவாகும். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு. இவை நம் நாட்டின் சட்டங்களாக இருக்கின்றன. இதை மறுத்து அரசே செயல்படுகின்றது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்றவற்றில் நிரந்தரப் பணிகளுக்கு இனி ஆள் எடுப்பதில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அரசாணை 119, 152,10 ஆகியவை நம் நாட்டு சட்டத்திற்கு எதிரானது.
திருச்சியில் சங்கமம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறு திகளில் தொழிலாளர் துறை சார்ந்தவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர் பிரச்சனை, பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்து ஊழியர்களுக்கு 82 மாதங்களாக போனஸ் பஞ்சப்படி பாக்கி ஆகியவற்றை அமல்படுத்தாமல் இருப்ப தால் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியர் என்ற தொழிலாளர் விரோத நடவடிக்கை யை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுபோன்றுள்ள ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மே மாதம் 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் எட்டு முனைகளில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள சிஐடியு முடிவெடுத்துள்ளது. இந்த நடைபயணம் மே மாதம் 30 ஆம் தேதி திருச்சியில் நிறைவு பெறும். 2400 கிலோ மீட்டர் தூரம் இந்த நடை பயணம் நடைபெற உள்ளது. விலைவாசி, வேலையின்மை,கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என இந்த நடை பயணத்தில் வலியுறுத்தப்படும்.
தில்லி பேரணிக்கு 10 ஆயிரம் பேர்
ஏப்ரல் 5 தலைநகர் தில்லியில் விவசாயி கள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு சார்பில் நடைபெறும் பேரணியில் தமிழ்நாட்டிலிருந்து பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள இருக்கின்றோம். நாடு முழுவதும் இருந்து ஐந்து லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்தப் பேரணி நாடாளு மன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக நடைபெறும்.
வாக்குறுதியை நிறைவேற்றுக!
இதேபோன்று தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அனைத்து கிராமங்களி லும் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் கிராமம் கிராமமாக சென்று பிரச்சார மேற்கொள்ள இருக்கிறோம். மோட்டார் வாகன திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பிப்ரவரி 28ஆம் தேதி 12 மணி முதல் 12.15 வரை தங்களது வாகனங்களை நிறுத்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்தான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. போராட்டத்தின் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.