tamilnadu

தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது

5 வீடுகளில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தூத்துக்குடி, ஜூன் 12- தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ரத்தினபுரி கீழ தெருவைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி. இவருடைய மகன் மணி. கட்டிட தொழிலாளியான இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் புதனன்று கட்டுமான  பணிக்கு சென்ற இடத்திலேயே தங்கி விட்டார். இதனால் அவரது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அன்று இரவு மணியின்  குடிசை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தி னர் அதிர்ச்சி அடைந்து, குடிசையில் தண்ணீ ரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். அப்போது அந்த குடிசையில் இருந்த சமை யல் எரிவாயு பயங்கர சத்தத்துடன் வெடித்து  சிதறியது. இதனால் சிலிண்டரின் பாகங்கள் சுமார் 100 மீட்டர் தூரம் சிதறி கிடந்தன. மேலும்  பக்கத்து வீட்டில் வசித்த மணியின் சகோத ரர்கள் ராஜசேகர், அன்பு மற்றும் வெள்ளைச் சாமி மனைவி பாக்கியம், இருட்டிமுத்து மகன் கடற்கரைமுத்து ஆகிய 4 பேரின் வீடுக ளுக்கும் தீ பரவியது. இதில் ராஜசேகர், பாக்கியம், கடற்கரை முத்து ஆகிய 3 பேரின் வீடுகளும் குடிசை என்ப தால் தீ மளமளவென்று பரவியது. அன்புவின்  கான்கிரீட் வீட்டின் கதவு, ஜன்னல்களும் தீப்பி டித்து எரிந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்த அனைவரும் அலறியடித்து வெளியே  ஓடி வந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந் தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மணியின்  வீட்டில் வெடிக்காமல் இருந்த மற்றொரு சிலி ண்டரையும் பாதுகாப்பாக எடுத்து சென்று அப்புறப்படுத்தினர். தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த டி.வி., பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

;