தற்போதைய தேவை மாவட்ட நிர்வாகத்தின் துரிதமான செயல்பாடே! வடகாட்டில் அமைதியை விரும்பும் மக்கள்!
எம். சின்னதுரை எம்எல்ஏ பேட்டி
புதுக்கோட்டை, மே 15 - புதுக்கோட்டை மாவட்டம் வட காட்டில் இரண்டு தரப்பு மக்களை யும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரை நேரில் சந்தித்து, நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந் தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வடகாட்டில் கடந்த மே 5 அன்று இரவு, பட்டியல் இன மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பட்டியல் இன மக்களின் வீடு களும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இருதரப்பு இளைஞர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மே 10 அன்று மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் சந்தித்து பேசிய தோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியதோடு, வட காட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தவும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, வியாழக்கிழமை யன்று வடகாட்டில் இரண்டு தரப்பு மக்களையும் சந்தித்தார். பின்னர் அவர் தெரிவித்த தாவது: வடகாட்டில் ஏற்பட்டுள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட மானது. இத்தகைய சம்பவம் நடந்துள்ளதை அப்பகுதியில் வசிக்கும் இருதரப்பு மக்களும் ஏற்கவில்லை. இரண்டு தரப்பின ரும் சுமூகமான நிலையை ஏற் படுத்தவே விரும்புகின்றனர். பிரச்சனையின் மையப் புள்ளியாக இருப்பது, பட்டியல் இன மக்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் அடைக்கலம் காத்தார் அய்யனார் கோவிலும், அதே பகுதியில் செயல்பட்டு வந்த அண்ணா கைப்பந்துக் கழகத் திடலும்தான். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் இரண்டு தரப்பினருமே அந்த இடத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மேற்படி இடம் தொடர்பாக வழக்கை விரை வில் முடிவுக்குக் கொண்டு வரு வதோடு, இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களையும் அழைத்துப் பேசி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைவில் சமாதானக் கூட்டத்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களில் உள்ள சில இளைஞர்கள் அரசு தேர்வாணையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர் களின் எதிர்காலம் கருதி அவர்களை விடுதலை செய்ய விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். பட்டி யல் இன மக்களின் அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை விரைந்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும். மேற்கண்ட சம்பவம் அப்பகு தியில் சாதிக் கலவரமாக மாறாமல் பாதுகாத்த அப்பகுதி மக்களின் முற்போக்கான சிந்தனை பாராட்டத்தக்கது. இரண்டு பகுதி மக்களும் சுமூகமான சூழலை விரும்பும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நாட்களைக் கடத்தாமல் விரைந்து நிரந்தர அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா மல் இருக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாக் கால ங்களில் பதற்றமான பகுதிகளில் கூடு தலான காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுமூகமான சூழலை ஏற்படுத்த தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாக மும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம். சின்னதுரை எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பினர் ஏ. ஸ்ரீதர், கே. சண்முகம், சு. மதியழகன், கி. ஜெயபாலன், டி. சலோமி, ஒன்றியச் செயலாளர்கள் எல். வடிவேல், ஆ. குமாரவேல், எஸ். பாண்டியன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.