tamilnadu

img

பன்னியாண்டி சமூகத்தினருக்கு சாதிச்சான்று வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 29-   தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தொடர் போராட்டத்தால், திரு வண்ணாமலை மாவட்ட பன்னியாண்டி சமூகத்தினருக்கு சாதிச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக  அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால்  பன்னியாண்டி சமூக சாதிச் சான்று இதுவரை திரு வண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப் படாமல் இருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி சமூகத்தின ருக்கு  எஸ்.சி., சாதிச்சான்று கேட்டு வரு வாய்த்துறையில் பலமுறை முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.  அண்மையில் இந்த சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சாதிச்சான்று கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.  திருவண்ணாமலை-திருக் கோயிலூர் சாலை, எடப்பாளையம், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். சாதிச் சான்று கிடைக்காததால்  உயர்கல்வி பயில முடியாத வேதனையில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண் டார்.  இந்த  அதிர்ச்சியான  சம்பவத்து க்குப் பிறகும்கூட மாவட்ட நிர்வாகம் பன்னியாண்டி சமூகத்தினருக்கு சாதிச் சான்று வழங்காமல் காலம் கடத்தி வந்தனர்.

இந்நிலையில் பன்னியாண்டி சாதிச்சான்று வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனே பன்னியாண்டி சமூகத்தினருக்கு சாதிச்சான்று வழங்கக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் ஜூன் 28 புதன்கிழமையன்று திருவண்ணாமலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எஸ். ராமதாஸ் தலைமை வகித்தார். முன்ன ணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பன்னியாண்டிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  டி.ஜி.சம்பத் ஆகியோர்  கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.  இதில்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் பா.செல்வன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நகரச் செயலாளர் எம். பிரகலநாதன், வழக்கறிஞர் எஸ். அபிராமன் மற்றும்  பன்னியாண்டி சமூக சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், சம்பத், ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால்,  சாதிச்சான்று வழங்கும் வரை இங்கிருந்து கலையமாட்டோம் என்றுகூறி அனைவரும் புதன்கிழமை இரவு முழுவதும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

வியாழக்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.  அப்போது, திருவண்ணாமலை கோட்டா ட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா  ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி இன மக்க ளுக்கு, மானிடவியல் துறை ஆய்வு செய்து சமூக சான்று அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எழுதிய  கடிதத்தின் நகல் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டது. பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் செய்தி யாளர்களிடம் பேசுகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  நிர்வாகிகள், வரும் ஜூலை நான்காம் தேதி, சென்னை மானிட வியல் துறை,  பழங்குடியினர் ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி மக்களுக்கு விரைவில் உரிய சான்று வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொள்வது என்ற அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்களே வசிக்க வில்லை என்ற முடிவில் மாவட்ட நிர்வாகம் இருந்து வந்தது. ஆனால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டத்தின் விளைவாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசிப்பது குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கை, முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்த சமூக மக்கள் தெரிவித்தனர்.