தேனி, நவ.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 9 ஆவது மாநாடு சின்ன மனூரில் சனிக்கிழமை எழுச்சியோடு துவங்கியது. சின்னமனூர் வண்டிப்பேட்டையி லிருந்து துவங்கிய செந்தொண்டர் பேரணியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தொடங்கி வைத்தார். பேரணி கண்ணாடி கடை முக்கு, எரசை சாலை, காந்தி சிலை, ரவுண்டானா வழியாக மாநாட்டு திடலை வந்தடைந்தது. கொடி-மரம் பெறுதல் க.புதுப்பட்டியிலிருந்து தோழர் பி. முருகேசன் நினைவாக கொண்டு வரப்பட்ட கொடிக் கம்பத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.லெனின் எடுத்து கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். ஆண்டிபட்டியிலிருந்து தோ ழர் கே.தயாளன் நினைவு கொடியை ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் எஸ். ராமர் எடுத்து கொடுக்க, மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். அதிர்வேட்டுகள் முழங்க, மாநாட்டு கொடியையும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.முருகன் ஏற்றி வைத்தார். மாநாடு தோழர்கள் கே.தயாளன், பி.முரு கேசன் நினைவரங்கில், தோழர் ஜி. முத்துகிருஷ்ணன் நுழைவு வாயிலில் மாநாடு துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், கே.ஆர்.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் என்.அம்சமணி ஆகியோர் மாநாட்டுக்கு தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற் குழு உறுப்பினர் இ.தர்மர் முன்மொழிந் தார். முன்னதாக, வரவேற்புக் குழு தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் பிரதிநிதி களை வரவேற்று பேசினார். மாநாட்டினை மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.லாசர் வாழ்த்திப் பேசி னார். அதனைத் தொடர்ந்து பிரதிநிதி கள் விவாதம் நடைபெற்றது. ஞாயிறன்றும் மாநாடு நடைபெறு கிறது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் வாழ்த்திப் பேசுகிறார். பிற்பகலில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி மாநாட்டினை நிறைவு செய்து பேசுகிறார்.