tamilnadu

img

சிபிஎம் திருவாரூர் மாவட்ட மாநாடு செந்தொண்டர் பேரணியுடன் தொடங்கியது

திருவாரூர், டிச.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட 23-வது மாநாடு வியாழ னன்று (டிசம்பர் 23) திருவாரூரில் செந் தொண்டர் பேரணியுடன் எழுச்சியோடு தொடங்கியது.  பழைய பேருந்து நிலைய பெரியார் சிலை அருகில் இருந்து பேரணியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகி கள், பிரதிநிதிகள், வர்க்க வெகுஜன அரங்க பொறுப்பாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர்.  தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்கள் ஜீ.வீரையன், எம்.சண்முகம் நினைவு அரங்கில் (ஏகேஎம் திருமண மண்டபம்) பொது மாநாடு துவங்கி யது. மாநாட்டினையொட்டி மறைந்த தொழிற்சங்க தலைவர் நா.பாலசுப்ரமணி யன் பெயரில் நுழைவு வாயில் அமைக் கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மறைந்த மூத்த தலைவர் பி.ஆர்.சாமியப்பன் பெயரில் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டிருந்தது.

கொடியேற்றம்

கட்சியின் மூத்த தலைவர் கே.ரெங்க சாமி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். செந்தொண்டர் அணிவகுப்பு மரியாதையும், தியாகிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  பொது மாநாட்டிற்கு வி.எஸ்.கலிய பெருமாள், பி.கந்தசாமி, பா.கோமதி ஆகி யோர் தலைமையேற்றனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா இரங்கல் தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலை வர் ஜி.பழனிவேல் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் துவக்க உரையாற்றினார். மாவட்ட மாநாட்டு சிறப்பு மலரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் வெளியிட, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பெற்றுக் கொண்டார். மலர்க்குழு கன்வீனர் பி.தெட்சி ணாமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மாநாட்டில் சிறப்பு செய்யப்பட்டது.  சென்னை பாரதி புத்தகாலயத்தின் சார்பில் புத்தக அரங்கு அமைக்கப்பட்டு புத்தக விற்பனை நடைபெற்றது. மாநாட் டின் இரண்டாம் நாளான வெள்ளியன்று (டிசம்பர் 24) முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ளன. புதிய மாவட்டக் குழு உறுப்பினர்களும், மாவட்ட செயலாளரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.