தமிழ்நாட்டில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு முக்கிய பணப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மரவள்ளிக் கிழங்கின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலை வீழ்ச்சியின் தாக்கம்
z கடந்த ஆண்டு மரவள்ளிக் கிழக்கு டன் ஒன்றுக்கு ரூ.16,000 வரை கிடைத்த விலை, தற்போது ரூ.5,000க்கும் கீழ் சரிந்துள்ளது.
z ஒரே ஆண்டில் டன்னுக்கு ரூ.11,000 குறைந்துள்ளது.
z தாய்லாந்து ரகம் பாய்ண்ட் ஒன்றுக்கு ரூ.600 இருந்த விலை, தற்போது ரூ.270க்கும் கீழ் வீழ்ந்துள்ளது.
z பிற ரகங்களின் விலையும் ரூ.590 இருந்து ரூ.260க்கும் கீழ் சரிந்துள்ளது.
விவசாயிகளின் நிலை
z ஒரு ஏக்கர் சாகுபடிக்கு சுமார் ரூ.50,000க்கும் மேல் செலவாகிறது.
z ஒரு ஏக்கரில் 10-15 டன் மகசூல் கிடைக்கும்.
z தற்போதைய விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.
அரசிடம் கோரிக்கை
z தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்டக்குழு சார்பில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
z சேலம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அமைச்சர், சேலம் சேகோசர்வ் நிர்வாக இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரச்சனைக்கான காரணங்கள்
z ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்காதது
z சேலம் சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி பரிசோதனை செய்யப்படுவதால் வெளி மார்க்கெட் விலை குறைந்துள்ளது
z ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் மற்றும் அதிக ரசாயன பயன்பாடு
சேகோசர்வ் நிர்வாக இயக்குனரின் நழுவல்
z விலை வீழ்ச்சி தொடர்ந்து வரும் நிகழ்வு என்றும், உற்பத்தி அளவைப் பொறுத்து விலை ஏற்ற இறக்கம் காணும் என்றும் கூறியுள்ளார்.
z இ டெண்டர் முயற்சி மூலம் ஜவ்வரிசி கொள்முதல் விலைஅதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
z ஜவ்வரிசியில் ரசாயன கலப்படம் கண்டறியப்பட்டால், உற்பத்தியாளர்கள் திரும்பப் பெறும் கால அவகாசத்தை குறைக்க உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.
கோரிக்கைகள்
1. மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலை வீழாமல் பாதுகாக்க வேண்டும்.
2. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் டன்னுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. ஆண்டுதோறும் முத்தரப்புக் கூட்டம் நடத்தி, மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.தமிழ்நாடு முதல் அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.