கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளி வர்க்கமும் புறச்சூழலில் உருவாகும் குறிப்பான மாற்றங்களை மதிப்பிடும் கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அதற்கு ஏற்றார்போல் அகநிலை சக்தி - அதாவது பாட்டாளிவர்க்க கட்சி எனும் அமைப்பை தயார்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசியல் புரட்சியை அரங்கேற்றி அரசு அதிகாரத்தை சரியான தருணத்தில் கைப்பற்ற வேண்டும். நவம்பர் புரட்சி குறித்து லெனின் ஒருமுறை குறிப்பிட்டார்: “10 நாட்கள் முன்னதாக புரட்சியை நடத்தியிருந்தால் அது குறைப்பிரசவம் போல வெற்றி பெற்றிருக்காது. 10 நாட்கள் தாமதப்படுத்தியிருந்தால் புரட்சியே நடந்திருக்காது. காலம் கடந்திருக்கும்.” மிகச்சரியான தருணத்தில் வர்க்க எதிரி மீது தீர்மானகர மான தாக்குதல் நடத்தும் அந்த நேரத்தை மிக துல்லிய மாக மதிப்பிட்ட பெருமை லெனின் அவர்களையே சாரும்.