சென்னை,ஏப்.4- பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகை யில், 60-க்கும் மேற்பட்ட சிறப் பம்சங்களுடன் உருவாக்கப் பட்ட ‘காவல் உதவி’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறை யாகவும், தண்டனை பெற்றுத்த ரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக் காத சூழ்நிலையை உருவாக் கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கி யப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களை யும், தொழில்நுட்ப யுத்திகளை யும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட் டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிக ளில் முதன்மையாக விளங்கும்.
சிறப்பம்சங்கள்
பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற ‘அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (டைல்-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க ‘டைல்-100’ என்ற செயலி ‘காவல் உதவி’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும். இச்செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.