சட்டப்பேரவையில் இன்று
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் அமைச்சரின் பதில் உரையும்.
எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைத்த முதலமைச்சர்
“மும்மொழி கொள்கை எங்களுக்கு தேவையில்லை என்பதுடன், இரு மொழிக் கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம்; தமிழ்நாடு இருக் கிறது என்பதை பாஜகவை தவிர, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் மும்மொழிக் கொள் கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் ஒன்றிய பாஜக அரசுக்கு விளக்கம் தந்திருக்கிறோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் பேசும்போது, நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார். நமது எதிர்க்கட்சித் தலைவர் (எடப்பாடி பழனிசாமி) தில்லிக்குச் சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை குறித்தும் அவர் வலியுறுத்த வேண்டும்” என்றார் முதலமைச்சர்.
கொள்ளிடம் ஆற்றில் கதவணை விரைவில் திறக்கப்படும்
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நடந்த கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய நாகை மாலி, “ரூ.465.43 கோடியில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிரா மங்களிடையே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் கதவணை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதில் அமைச்சர்கள் தலையிட்டு, அந்த கதவணையை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், “அந்த கதவணையை இந்த கூட்டத் தொடருக்கு முன்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். சிறிதளவு பணி மட்டுமே முடிய வேண்டியுள்ளது. அந்தப் பணியும் மிக விரை வாக முடிக்கப்பட்டு இந்த கூட்டத் தொடர் முடிவதற்குள் கத வணை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்றார்.
அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் ஆவின் நெய்
“தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ஆவின் நெய்யைத் தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்களை கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா?
கேள்வி நேரத்தின்போது, நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “376 பனை வெல்லம் தொழி லாளர் கூட்டுறவு சங்கங்கள், 8 மாவட்ட பனை வெல்லம் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதேபோல் நாங்குநேரி யில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும்” என்றார். பனை கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க அரசு முன் வருமா? என்ற துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “பனையிலிருந்து பதனீர் இறக்கும் போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால், போதைப் பொருளாக மாறிவிடுகிறது. பனைப் பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கா லத்தில் பரிசீலிப்பார்” என்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இத னால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாரா யம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு, வழக்கு போடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “கைது செய்பவர்கள் குறித்து முதல மைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அமைச்சரை மாப்பிள்ளை என அழைத்த அதிமுக எம்.எல்.ஏ.
கேள்வி நேரத்தின் போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ. (பவானி தொகுதி) கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், தனி யார் நிறுவனங்கள் சோலார் மின் தகடுகளை அதிகமாக தயாரிக்கின்றன. அவை 100 கேவி திறன் கொண்டதாக உள்ளன. அவற்றை 120 கே.வி திறன் உள்ளதாக அனு மதிக்க மாப்பிள்ளை (அமைச்சர் செந்தில் பாலாஜி) அனுமதிக்க வேண்டும் என்றார். அதிமுக எம்.எல்.ஏ.வின் இந்த பேச் சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பழக்கத் தில் வந்துவிட்டது சாரி... சாரி... என்று கூறி கருப்பண்ணன் சமாளித்தார்.
10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, மார்ச் 25 - தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் உயர் அதிகாரி கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவரங்கள்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.சுஜாதா, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார், இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக பாஸ்கரன், மயிலாப்பூர் துணை ஆணையராக கார்த்திக், சென்னையில் உளவுத்துறை பிரிவு-1 துணை ஆணையராக சக்திவேல், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணை யராக மேகலினா ஐடன், சென்னை காவல்துறை நலப் பிரிவு துணை ஆணையராக ஹரி கிரண் பிரசாத், சென்னையின் சிபிசிஐடி காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக ஜி.ஜவகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.