tamilnadu

img

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணம்

கடலூர், மயிலாதுறை, நவ.14- மழைநீர் வடிந்த உடன் கணக்கெடுப்பு நடத்தி, நெற்பயிர் சேதங்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் பருவ மழையால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூர் முதன்மை யானதாகும். இந்தாண்டு பருவமழை யின் தொடக்கத்திலேயே அதிக மழைப்பொழிவின் காரணமாக இம்மாவட்டம் அதிகளவு பாதிப்பு களைச் சந்தித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவ லாக மழை பெய்து வருகிறது. குறைந்த  காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக குடியிருப்பு மற்றும் விளை நிலங் களை மழைநீர் சூழ்ந்தது.  கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லுள்ள குடியிருப்புகளையும் ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலத்தையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 6000 ஏக்கர் விலை நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், 208 கிராமங்களை சேர்ந்த 4,655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதே போல் காய்கறி, பூஞ்செடி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் நீரில்  மூழ்கியுள்ளது. இதில்  190 விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள்  பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 நபர் களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள் ளது என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் 43 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 62 இடங்கள் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுபோன்று கிராமப் பகுதி களில் 231 பஞ்சாயத்துகளில் குடி யிருப்புப் பகுதிகள் பாதிப்படைந்துள் ளன என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீராணம் ஏரியி லிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி  தண்ணீர் வெள்ளியங்கால் ஓடை வழி யாக திறக்கப்பட் டதால்  குடியிருப்பு மற்றும் சம்பா நெற்பயிர்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பருவமழையால் பாதிக்கப் பட்டுள்ள கடலூர் மற்றும் மயிலாடு துறை மாவட்டங்களில் பாதிப்புக்கு உள்ளான

பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (நவ.14) கடலூர் வந்  தார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி தொகுதிக்குட்பட்ட கீழ்பவானி குப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்  கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. அவற்றை பார்வை யிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், தண்ணீர் சூழ்ந்த விளை  நிலங்களை பார்வையிட்டார். பிறகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலை,  போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.  பின்னர், கடலூர் மாவட்டத்தில் வீடுகள் எந்தெந்த பகுதிகளில் சேத மடைந்துள்ளன, சாலைகளில்  எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள் ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் முதல் வர் கேட்டறிந்தார்.

வல்லம்படுகை

இதனைத் தொடர்ந்து வல்லம் படுகை கிராமத்தில் அமைக்கப்பட்டி ருந்த புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவி களை வழங்கினார்.  அப்போது விவசாயிகள் சங்க  தலைவர்கள் இளங்கீரன் மற்றும்  பசுமை வளவன் ஆகியோர் மனு அளித்த போது வயல்களில் தண்ணீர் வடிந்த உடன் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் உள்ளிட்ட இடுபொருட் கள் வழங்கப்படும் என கூறினார்.  மேலும் பயிர் காப்பீடு செய்வ தற்கு நவ. 15 ஆம் தேதியுடன் கால  அவகாசம் முடிவதால் அதனை நீட்  டிக்க அதிகாரிகளுடன் பேசி முடிவு  செய்வதாகவும் கூறினார்.  முதலமைச்சருடன் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்  னீர்செல்வம், கே.என்.நேரு, எ.வ. வேலு, சி.வே.கணேசன், சிவ. வீ. மெய்யநாதன், கடலூர் மாவட்ட  ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் அதிகாரிகள் உட னிருந்தனர்.

மயிலாடுதுறை

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் அத னைச் சுற்றியுள்ள பகுதிகளையும், வெள்ளத்தால் சூழப்பட்ட விளை நிலங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்  தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை வழங்  கினார். பின்பு, சீர்காழி வட்டம், பச்சை பெருமாநல்லூர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கனமழை யால் பாதிக்கப்பட்ட மக்கள் பாது காப்பாக தங்குவதற்காக அமைக் கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு சென்று பார்வையிட்டார். மேலும், இம்முகாமில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிட மேற்கொள் ளப்பட்டு வரும் உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு, உண வின் தரத்தினை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பச்சை பெருமாநல்லூரில் அமைக்கப்பட் டுள்ள மருத்துவ முகாமை  முதல மைச்சர் ஆய்வு செய்து, பொதுமக்க ளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து,  உமையாள்பதி காலனியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும், சேதமடைந்த வீடுகளையும் முதல மைச்சர் பார்வையிட்டு, பாதிக்கப் பட்ட மக்களிடம் விபரங்கள் கேட்ட றிந்தார். பின்னர், உமையாள்பதி கிராமத்தில் 221 ஹெக்டேர் பரப்ப ளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி பாதிக் கப்பட்டுள்ளதை, பார்வையிட்டு விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.  விவசாயிகள் மற்றும் பொதுமக்  கள் யாரும் அச்சப்பட தேவை யில்லை; உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என முதலமைச்சர் தெரிவித்தார். மழையால் பாதிக் கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடு களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிட, உடனடியாக நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டு மென அதிகாரிகளுக்கு முதலமைச் சர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கனமழை யால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுக்கு சீர்காழி பேருந்து நிலையத் தில் அரிசி, மளிகைப் பொருள்,  சேலை, போர்வை, பாய் போன்ற நிவாரணப் பொருட்களை முதல மைச்சர் வழங்கினார்.