சென்னை, மார்ச் 14- பள்ளிகளில் இட ஒதுக்கீடுக்காகத்தான் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவுகள் விவரம் கேட்கப்படுகிறது. எனவே பள்ளிகளில் சாதிகள் பற்றிய விவரம் கேட்கப்படுவதாக தவறானப் பிரச்சாரம் வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சாதி விவரக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து 13.3.2022 அன்று வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அளித்த ஒரு சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பட்டியல் வகுப்பினரா, பிற்படுத்தப்பட்ட வரா, சிறுபான்மையினரா, முன்னேறிய வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருந்தது. சாதியைக் கேட்க வில்லை; சாதி சார்ந்த பிரிவுதான் கேட்கப் பட்டது. ஒரு மாணவர் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதுதான் தமிழ்நாடு அரசுக்குத் தேவை. மாணவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இருந்தால்தான், நலத்திட்டங்களைப் பயன்படுத்த முடியும். இது நீண்ட காலமாகப் பின் பற்றப்படும் நடைமுறை; புதிய செயலியில் இதை எளிதில் பதிவேற்ற முடியும். மாணவர் பள்ளியில் சேர்ந்தால், இந்த செயலியில் அவரது சாதி எங்குமே சேமிக்கப்படுவ தில்லை; அவர் சாதி சார்ந்த பிரிவுதான் பதிவாகும். அவர்கள் இட ஒதுக்கீடு பெற இந்த அடிப்படைத் தகவல் தேவை’’ என்று தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால், பள்ளிச் சான்றிதழில் சாதிப் பிரிவு குறிப்பது எஸ்.எஸ்.எல்.சி., சான்றிதழில் முன்பெல்லாம் சாதி பதிவாகும். அதுதான் கடைசிவரை இட ஒதுக்கீடு, உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பணித் தேர்வுகளின் இறுதிவரை எடுத்துக் கொள்ளப்படும் ஆவணம் ஆகும். பள்ளிச் சான்றிதழ்தான் சரியான ஆவணம். பள்ளிகளில் சாதியைக் கேட்கலாமா?’ சில மாணவர்கள், பெற்றோர்கள் சாதிகள் இல்லை - கூடாது என்று கூறுவோரே, பள்ளிகளில் சாதியைக் கேட்கலாமா? என்று ஒரு வழமையான கேள்வியை சாதி ஒழிப்பாளர்களாகவும், சமூகநீதிப் போராளிகளாகவும் உள்ளவர்களை நோக்கி அடிக்கடி கேட்பதுண்டு. அப்படி கேட்போர் இரு வகையினர்; ஒரு சாரார், சாதி ஒழிப்பு ஆர்வத்தினர் உண்மையாக; மற்றொரு சாரார், இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள். அவர்கள் சாதியை மற்ற எல்லாவற்றிலும் கடைப்பிடித்துக்கொண்டே இப்படி ஏதோ பெரிய சாதி ஒழிப்பு வீரர்கள்போல வேடங்கட்டிக் கொண்டு கேட்பதுண்டு. அதற்குப் பதில் பெரியார் கூட கூறியுள்ளார். தயக்கமில்லாமல் சாதி - தனிப்பிரிவு தேவையே! எனவே, சாதி ஒழிப்பு இலக்கு என்றாலும், அது முழுமை அடைய, அனைவருக்கும் அனைத்தும் வழங்க, ஆதார சான்றுகளாக பள்ளிக் கல்விச் சான்று சரியான ஆவணம். மக்கள் தொகைக் கணக்கெடுப் பில்கூட, ஊதிப் பெருக்கப்பட்ட சாதிகள் எண்ணிக்கை வரும் அபாயம் உண்டு. ஆனால், இந்த முறையில், அதற்கு வழியேயில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.