tamilnadu

தமிழகத்தில் மதப் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் பாஜகவின் நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

மாணவியின் பெற்றோரிடமும் முறையாக விசாரிக்க வேண்டும்.குடும்பத்தாரிடமிருந்து அந்த மாணவிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும். 

தஞ்சாவூர், ஜன.28- திருக்காட்டுப்பள்ளி அருகே தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் மரணம் குறித்து பல சர்ச்சையான கருத்து களை சிலர் எழுப்பி வருகின்றனர். மாணவி படித்து வந்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அந்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளை சந்தித்து பேசினோம். மாணவி தற்கொலை மரணம் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். வருங்காலத்தில் இதுபோன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 162 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய,  பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அவர்களின் சேவை பாராட்டத்தக்கது. மறுக்கப்பட்ட மக்களுக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகளாக கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் கல்வியை வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில் மாணவி லாவண்யா, எதற்காக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கனவே மாணவி காவல்துறையில் அளித்த வாக்கு மூலத்தில், “பள்ளி ஆசிரியர்கள் அளித்த அதிக ப்படியான வேலை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக” தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.  இதுவே உண்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 4 வருடமாக மாணவி அதே பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியின் மீது இதற்கு முன்பு இதுபோன்ற எந்த புகாரும் இல்லை. மதமாற்றம் வற்புறுத்தல் போன்ற நிலை இருந்தால் மாணவி பள்ளியை விட்டு சென்றிருக்கலாம். தற்போது புகாரில் கைது செய்யப்பட்டுள்ள 62 வயதான ஆசிரியை சகாயமேரி அந்த மாணவிக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு ஒரு தாய் தனது சொந்த மகளுக்கு செய்வது போல பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியுள்ளார். மாணவியின் பெற்றோர்களே கூட இதுபோன்ற ஏற்பாடு களை செய்ததாக தெரியவில்லை. 

10 நாட்கள் கழித்து...

கடந்த ஒன்பதாம் தேதி மாணவி பூச்சி மருந்து அருந்தியதாக கூறப்படும் நிலையில் 16ஆம் தேதி தான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 19ஆம் தேதி மாணவி இறந்துள்ளார். 9ஆம் தேதி பூச்சி மருந்து குடித்த மாணவி பத்து தினங்கள் கழித்து இறந்துள் ளார் என்பது மருத்துவ ரீதியில் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.  அந்த மாணவிக்கு வீட்டிலேயே பல்வேறு இடையூறுகள் இருந்ததாகவும், சிலர் விசார ணையில் சொல்லியிருக்கின்றனர். எனவே எது உண்மை, எது உண்மை இல்லை எனத் தெரியவில்லை.  இந்நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசியதாக ஒரு வீடியோ  வெளியாகியுள்ளது. இதனை ஒரு தேசிய பிரச்ச னையாக பாஜக மாற்றி உள்ளது. இது வேதனை அளிக்கிறது, கவலையளிக்கிறது. தமிழகத்தில் என்ன மாதிரியான நிலைமையை உருவாக்கப் போகிறார்கள் என அச்சம் ஏற்படுகிறது.  பாஜக தேசியத் தலைவர்கள் நான்கு பேர் கொண்ட குழு அமைத்து, அவர்கள் தமிழ கத்திற்கு விசாரணைக்கு வர இருப்பதாக தெரி வித்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்ச னை நடந்து இருப்பது போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க பாஜகவினர் முயன்று வரு கின்றனர். 

தற்போது அந்தப் பள்ளியில் 444 பேர் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகள், 219 பேர் கிறிஸ்தவ வகுப்பைச் சார்ந்தவர்கள், 405 பேர் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த மாண வர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் இந்த  ஒரு மாணவியை மட்டும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் என்று கூறியது ஏற்கத்தக்கதாக இல்லை. 162 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்தப் பள்ளியில், இதுவரை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழவில்லை. 162  ஆண்டு காலமாக வராத குற்றச்சாட்டு இப்பொழுது வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.  இது உண்மையென்றால் மாணவி காவல்துறையினரின் விசாரணையில் வாக்கு மூலம் அளித்து இருக்கலாம். ஆனால் இதுவரை  அவ்வாறு சொன்னதாக தெரியவில்லை. ஆனால் மாணவி அவ்வாறு சொன்னதாக ஒரு வீடியோ வந்துள்ளது; இப்போது அதை மறுத்து வேறு ஒரு வீடியோ வந்துள்ளது.  காவல்துறை அதே பள்ளியில், மாணவிகளி டம் நடத்திய விசாரணையில் அது போன்ற குற்றச்சாட்டுகள் வரவில்லை. எனவே இது போன்ற இட்டுக்கட்டிய பொய்யான குற்றச் சாட்டை சொல்லி, மதமாற்றம் நடப்பதாக கூறி,  மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் கல வரத்தை உருவாக்கவும் பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர். சிறுபான்மை கிறிஸ்துவ அமைப்புகள் செய்து வரும் கல்விச்  சேவையை இழிவுபடுத்தும் விதமாக, பாஜக வினர் செய்து வரும் இதுபோன்ற நட வடிக்கைகளை ஏற்க முடியாது. 

அண்ணாமலையின் கீழ்த்தர அரசியல்

அமைதியாக உள்ள தமிழகத்தில் மத மாற்றம் ஏற்படுகிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மதப் பதற்றத்தை உரு வாக்க முயற்சித்து வருகின்றனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தமிழக பாஜக தலைவராக வந்துள்ள அண்ணாமலை இவ்வளவு கீழ்த்தரமாக அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல.  மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்; அதற்காக ஒரு அமைப்பை ஏற் படுத்த வேண்டும் என்றெல்லாம் பாஜகவினர் பேசிவருவது, தமிழகத்தில் மக்களை திசை திருப்பும் செயலாகவும், மதப் பதற்றத்தை உரு வாக்கும் நோக்கமாகவும் நாங்கள் கருது கின்றோம்.  தமிழக அரசு இதுபோன்ற கருத்து களுக்கு இடம் அளிக்க கூடாது. இது போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கல்விச் சேவையில் ஈடுபட்டு வந்துள்ள சிறுபான்மை நிறுவனங்கள் தற்போது சிறை, நீதிமன்றம், வழக்கு என அலைந்து மன  உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். தமி ழகத்தில் பதற்றத்தை உருவாக்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் இடமளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். பாஜக தலைமையில் 4 பேர் கொண்ட குழு  அமைத்து, அந்த குழு தமிழகத்திற்கு வருவதென்பது உள்நோக்கத்துடன், தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினை க்கும் செயலாகத்தான் கருதவேண்டியுள்ளது.  தமிழக அரசு இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். பள்ளி நிர்வா கத்தை விசாரணைக்கு உட்படுத்தும் அதே நேரத்தில், மாணவியின் பெற்றோரிடமும் முறை யாக விசாரிக்க வேண்டும். குடும்பத்தாரிட மிருந்து அந்த மாணவிக்கு இடையூறு ஏற்பட்டு ள்ளதாக கூறப்படுவது குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும். பள்ளி வார்டன் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலை யில் 62 வயதான அந்த ஆசிரியை இன்று சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது சிறை என்பதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல. 

தமிழக முதலமைச்சர் பாரபட்சமற்ற விசார ணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்ச னையில் பாரதிய ஜனதா கட்சி மேலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்க முயன்றால், தஞ்சையில் அனைத்துக் கட்சிகள் திரண்டு ஆயிரக்கணக்கானோர் போராடியது போல, தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம்.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாநகரச் செயலாளர் வடிவேலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  

                (ந.நி.)