tamilnadu

img

மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்

சென்னை, செப். 17 - கருத்து, நிதி, தன்னாட்சி சுதந்திரம் இருந்தால்தான் மாநில பல்கலைக்கழகங்களை பாதுகாக்க முடியும் என்று சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், குற்றவியல் துறைத் தலைவருமான பேரா.எம்.சீனிவாசன் கூறினார். மாநில பல்கலைக் ்கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிறன்று (செப்.17) சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது.  இந்திய மாணவர் சங்கம் நடத்திய இந்த நிகழ்வில் பேரா.எம்.சீனிவாசன் பேசியது வரு மாறு: பல்கலைக்கழகங்கள் அறிவுக் களஞ்சியமாக திகழ வேண்டும். இங்கு தான் புதுப்புதுச் சிந்தனைகள் பீறிட்டு எழும்; கருத்துக்கள் பலவும் மோதும். ஆனால், மனம் புண்படுகிறது என்ற பெயரால் ஆராய்ச்சி, கருத்துரிமை முடக்கப்படு கிறது. மாணவர்களின் எண்ணிக்கை, நிதியை குறைத்து, ஒன்றிய அரசு ஆராய்ச்சிகளை முடக்கு கிறது. உதாரணமாக, அமலாக் கத் துறையின் செயல்பாடு கள் சுதந்திரமாக ஆராய்ச்சி செய்ய நிதி,  ஆசிரியர் போன்றவை பல்கலைக் கழகங்களில் இல்லை. தென்னிந்திய பல்கலைக்கழகங்கள், வரலாறு போன்ற ஆய்வுகளில் பின்தங்கி உள்ளது. ஆராய்ச்சிகளால் தான் சமூகப் பிரச்சனை களுக்கு தீர்வு காண முடி யும்.

உலக மயக் கொள்கை யால் தனியார் பல்கலைக் கழகங்கள் அதிகரித் துள்ளன. அத்தகைய பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு சுதந்திர மானசூழல் இல்லை. சுதந்திர சூழல் இல்லாத இடத்தில் சிந்தனைகள் எப்படி வளரும்,தரம் எப்படி இருக்கும்? தனியார் பல்கலைக்கழகங்களை வைத்துள்ள அரசியல் வாதிகள், அரசு பல்கலைக் கழகங்களை வளராமல் பார்த்துக் கொள்கின்றனர். பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு, அரசியல் தலையீடு உள்ளது. தேடல் குழு துணைவேந்தருக்கு தகுதியான நபர்களை தேடும்.தற்போது, துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிலிருந்து 3 பேரை தேர்ந் தெடுப்பார்கள்.  தேடல் குழு (சர்ச்சிங் கமிட்டி), தெரிவு (செலக்ட் கமிட்டி) குழுவாக மாறி விட்டது. அந்த மூன்று பேரில் யாரை நாக்பூர் (ஆர்எஸ்எஸ் தலைமை யகம்) தீர்மானிக்கிறதோ அவரை துணை வேந்தராக நியமிக்கிறார்கள். தமிழ் நாட்டில் 4-5 பேர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இது சரியானது அல்ல. இந்த அரசியல் தலை யீடு காரணமாக துறை செயலாளர், அமைச்சரின் அலுவலக வாயிலில்  துணை வேந்தர்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. மாதந்தோறும் சிண்டிகேட் கூட்டத்தை நடத்துவதற்கு மாறாக, 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்துகின்றனர்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் (நான் டீச்சிங் ஸ்டாப்) 50 விழுக்காடு மட்டுமே நிரப்புகின்றன. எஞ்சிய இடங்களை ஒப்பந்த அடிப்படையில் பல்கலைக்கழகம் நிரப்பி, சம்பளம்தர வேண்டும். இதனால் பல்கலைக் கழகங்களின் நிதி நிலை மோசமடைகிறது; தொழிலாளர்கள் சுரண்டப் படுகின்றன. அனைத்து நிலை பணியிடங்களுக்கும் அரசே நிதி ஒதுக்கி நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக வளா கங்களில் மாணவர்களின் ஜனநாயகப் பூர்வமான செயல்பாட்டிற்கு இட மளிக்க வேண்டும். மாணவர் பேரவை தேர்தலை  நடத்த வேண்டும். பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி யில் அரசு தலையீடு செய்யக் கூடாது. இவற்றையெல் லாம் ஒரு சேர செய்யும்போது தான் பல்கலைக் கழகங் களை வலுவானதாக, தர மிக்கதாக மாற்ற முடியும். பல்கலைக்கழகங்களை அதன் தன்மையை பாது காக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கிற்கு சங்கத் தின் மாநிலத்தலைவர் கோ.அரவிந்தசாமி தலைமை தாங்கினர். அகில இந்திய இணைச் செய லாளர் ஆதர்ஸ் எம் ஷாஜி, மாநிலச்செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, மத்தியக்குழு உறுப்பி னர் சி.மிருதுளா,மாநில செயற்குழு உறுப்பினர் ச.குமரவேல், சென்னை பல்கலைக்கழக கிளைத் தலைவர் ம.அய்யனேஸ் வரன், செயலாளர் சு.விக்னேஷ் உள்ளிட்டோர் பேசினர்.