tamilnadu

img

ஆசிரியர் இயக்க முன்னோடி

க.மீனாட்சிசுந்தரம் காலமானார்

நாகப்பட்டினம், மே 14- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் மேலவை உறுப்பினரும், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளருமான க.மீனாட்சிசுந்தரம், தஞ்சையில் மருத்துவமனையில் வியாழக் கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.  இவர் நாகை மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமாரின் தந்தையாவார்.

நாகை மாவட்டம், வேதாரணி யம் வட்டம், தலைஞாயிறைச் சேர்ந்தவர் க.மீனாட்சி சுந்தரம். தலைஞாயிறு மற்றும் சில ஊர் களின் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார்.  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். ஆசிரியர்கள் போராட்டங் களில் தீவிரமாகப் பங்கேற்றுச் சிறை சென்றவர். ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்று தீவிர மாகப் பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

சிபிஎம் இரங்கல்

இவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.