tamilnadu

img

போடியில் அகில இந்திய மாநாடு நிதி வசூல் ஒரே நாளில் ரூ. 1.15 லட்சம் திரண்டது

தேனி, டிச. 27  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடை பெறுவதை முன்னிட்டு போடியில் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு -நிதி வசூல் இயக்கத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 850 ரூபாய் லட்சம் திரண்டது. சுமைப்பணி தொழிலாளர்கள், வணி கர்கள், உணவகம், அரசியல் கட்சி பிர முகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் உற்சாகமாக நிதி அளித்தனர். இந்நிதி வசூலில்  மாவட்டச் செயலாளர் எம்.ராமச் சந்திரன், மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, எஸ்.கே.பாண்டி யன், தாலுகா செயலாளர்  சி.முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வம், என்.சுதா, தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஆர்.காமராஜ், எஸ்.மீனா, ஆர்.தனலட்சுமி, ஆர்.தங்கப் பாண்டி, ஆர்.ஜோதிமணி, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.