tamilnadu

img

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதே குழந்தைகள் விஞ்ஞானி திட்டத்தின் நோக்கம்!

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதே  குழந்தைகள் விஞ்ஞானி திட்டத்தின் நோக்கம்!

புதுக்கோட்டை, ஜூன் 18 - ‘குழந்தைகளிடத்தில் அறிவியல் மனப் பான்மையை வளர்ப்பதே ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தின் நோக்கம் என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி  ஆர்.ராஜ்குமார். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி  திட்டத்தின் 13 ஆவது பயிற்சி வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் புதுக்கோட்டை சந்தபேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 30  மாணவிகள் பங்கேற்றார்கள். நிகழ்விற்கு எம்.எஸ்.சுவாமிநாதன்  ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித் தார். அவர் பேசுகை யில், “அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் ‘ஒவ்வொரு குழந் தையும் ஒரு விஞ் ஞானி’ திட்டத்தின்  நோக்கமாகும். பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதுவரை  360 மாணவர்கள் இத்திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளார்கள்” என்றார்.  ‘ஆசிரியர் மனசு’ திட்ட ஒருங்கி ணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார்  நிகழ்வை  துவக்கி வைத்துப் பேசினார். புதுக்கோட்டை  வாசகர் பேரவை செயலாளர் பேரா.எஸ். விஸ்வநாதன், சந்தபேட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். முன்னதாக ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு  விஞ்ஞானி’ திட்டத்தின் ஆசிரியர் பா.மீனா வரவேற்க, தொழில்நுட்ப அலுவலர், கேஸ். பிரிட்டோ நன்றி கூறினார்.