இராமநாதபுரம், ஜூன் 28- மக்களைப் பற்றி கவலைப் படாத அதிமுகவில் தற்போது அதி காரப்போட்டியால் குழப்பம் நிலவு கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். இராமநாதபுரத்தில் பத்திரிகை யாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: குடியரசுத் தலைவர் தேர்த லில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரி யமல்ல. ஏனென்றால் பாஜகவினர் நம்பிக்கை இல்லாமல் அதிருப்தி யில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக வேட்பாளரை விட எதிர்க்கட்சி களின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3 மடங்கு கூடுதலான வாக்குகளை பெறுவார். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் எனும் காண்ட் ராக்ட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவில் குழப்பம் மற்றும் அதிகார போட்டி நடைபெறுகிறது. மக்களைப் பற்றியோ, தேசத்தைப் பற்றியோ கவலைப்படாத அதி முக, பாஜகவுடன் ஒருபோதும் கூட் டணி இல்லை என்ற ஜெயலலிதா வின் உறுதிமொழியை கூட கை விட்டது. பாஜக தலைவர் அண்ணா மலை தமிழகத்தில் பாஜக குறித்து கற்பனைக்கு ஒவ்வாத கனவில் மிதக்கிறார். அவரது கனவு பலிக் காது.
தமிழக முதல்வர் ,காவல் துறை இயக்குநர் ஆகியோர் லாக்கப் மரணங்களை தடுப்பது தொடர் பாக உறுதிமிக்க நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். சென்னை உட்பட மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை அதி கரித்து வருகிறது. இது தொடர்பாக காவல் துறை இயக்குனர் நட வடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். திமுக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை ஆதரிக்கி றோம். அதே சமயம் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் வரும் நெருக்கடி கள், குழந்தைகள் மற்றும் பெண் கள் தொடர்பான பாலியல் வன் முறைகள், வன்கொடூரக் கொலை கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறோம். இதுதொடர்பாக ஜூலை மாதம் சென்னையில் ஒரு விரிவான விழிப்புணர்வு பிரச்சா ரத்தை நடத்தவுள்ளோம். இராமேஸ்வரம் வடகாடு பகுதியில் வன்கொடூரக் கொலை செய்யப்பட்ட மீனவ பெண் குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் வேலை வழங்க வேண் டும்.
தமிழக அரசு ஆசிரியர் பணி யிடங்களுக்கு நிரந்தரமான பணி நியமனம் செய்திட வேண்டும். மீன வர்களுக்கான டீசல் மானியம் அதி கரிக்கப்பட வேண்டும். விசைப் படகுகளுக்கு டீசலை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண் டும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான கடன்களை உடனடியாக வழங்கு வதுடன் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். இராமநாதபுரம் உள் ளிட்டு மாநிலம் முழுவதும் அதிக மான நெல் கொள்முதல் நிலை யங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அர சிடம் வற்புறுத்தி போராடி கூடுதல் நிதி பெற வேண்டும். ஊழல் தடுப்பு ஆணையம் தமிழகத்தில் முன் னாள் அமைச்சர்கள், நான்கு ஐஏஎஸ் மற்றும் உயர் அதிகாரி கள் மீது போடப்பட்ட வழக்கு நட வடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தாலுகா செயலாளர் பி. செல்வ ராஜ் உடனிருந்தனர்.