tamilnadu

img

பயங்கரவாதிகளை தண்டிக்க வேண்டும், அப்பாவிகளை அல்ல!

பயங்கரவாதிகளை தண்டிக்க வேண்டும்,  அப்பாவிகளை அல்ல!

ஒன்றிய அரசுக்கு உமர் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர், ஏப். 27  பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி வலியுறுத்தியுள்ளனர்.

வீடுகள் தகர்ப்பு, நூற்றுக்கணக்கானோர் கைது

பஹல்காமில் நடந்த தாக்குத லுக்குப் பின்னர் காஷ்மீரில் ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் கட்டுப் படுத்தப்பட்ட வெடிப்புகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவாளர் களின் வீடுகள் சோதனையிடப்பட்டுள் ளன. நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனந்த்நாக் மாவட்டத்தில் மட்டும் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளின் போது  அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந் துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும், பாகிஸ்தானிய பாஸ் போர்ட் வைத்திருப்போரை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாடு  முழுவதுமே இந்திய-பாகிஸ்தானிய குடும்பங்கள் சிக்கலில் சிக்கியுள்ள னர். வாகா-அட்டாரி எல்லையில் குழப்பம் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உமர் அப்துல்லா கவலை

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முத லமைச்சர் உமர் அப்துல்லா, “பயங்கர வாதத்திற்கும் அதன் மூலகாரணங் களுக்கும் எதிரான தீர்க்கமான போராட்டத்தை” ஆதரிப்பதாகத் தெரி வித்துள்ளார். அதே சமயம், “குற்ற வாளிகளைத் தண்டியுங்கள், அவர் களுக்கு இரக்கம் காட்டாதீர்கள், ஆனால் அப்பாவி மக்கள் சேதத்தின்  பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்கட்டும்”  என்று வலியுறுத்தினார். காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத் திற்கு எதிராக தன்னிச்சையாக கிளர்ந் தெழுந்துள்ள நிலையில், (ஒன்றிய அரசின்) தவறான நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை குறைத்து விடக்கூடாது என அவர் எச்சரித்துள் ளார்.

பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடு காட்ட வேண்டும்: மெஹ்பூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநா யகக் கட்சியின் (PDP) தலைவர் மெஹ் பூபா முப்தி, மத்திய அரசு “பயங்கர வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு” காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். “ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பயங்கர வாதிகளின் வீடுகளுடன் சாதாரண காஷ்மீரிகளின் பல வீடுகள் இடிக்கப் பட்டுள்ளதாகவும்” முப்தி குறிப்பிட்டுள் ளார். அப்பாவி மக்களை அந்நியப் படுத்துவது பயங்கரவாதிகளின் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கே வலு சேர்க்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடுமையான தண்டனை வழங்கப்படும்: பிரதமர் மோடி

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பாஹல்காம் தாக்குதலைப் பார்த்து “ஒவ்வொரு இந்தியனின் இரத்த மும் கொதிக்கிறது” என்று தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நான் மீண்டும்  உறுதியளிக்கிறேன். குற்றவாளி களுக்கும் இந்தத் தாக்குதலின் சதிகா ரர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்,” என்று அவர் ஞாயி றன்று மன் கி பாத் உரையில் கூறினார். நம் நாட்டின் ஒற்றுமையும் 140 கோடி குடிமக்களின் ஒருமைப்பாடும் பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தப் போரில் நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதி யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலா னோர் சுற்றுலாப் பயணிகள். ஏப்ரல் 22 பாஹல்காம் தாக்குத லுக்குப் பின்னர் சுமார் 1,500 உள்ளூர் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.