tamilnadu

img

திருநெல்வேலி பேராசிரியர் விமலாவுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு விருது

திருநெல்வேலி பேராசிரியர் விமலாவுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு விருது

மலையாள மொழி நூலை தமிழில்  மொழி பெயர்ப்பு செய்த பேராசிரி யர் ப.விமலா உள்பட 21  பேருக்கு 2024-ஆம் ஆண்டுக் கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  நேபாளி, சமஸ்கிருத மொழிகளுக் கான பரிசு பின்னர் அறிவிக்கப்படும் என்றும்   உருது மொழிபெயர்ப்புக்கு பரிசு இல்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தில்லியில் சாகித்திய அகாதெமி யின் செயற்குழுக்கூட்டம் அதன் தலை வர் மாதவ் கெளஷிக் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்  2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு சாகித்திய அகாதெமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டன.  காலச்சுவடு பதிப்பக வெளியீடான ‘என்டே ஆண்கள்’ என்ற நளினி ஜமீலா வின் மலையாள மொழி சுயசரிதை புத்த கத்தை ‘எனது ஆண்கள்’ என்ற பெயரில்  தமிழில் மொழிபெயர்த்த ப.விமலாவின்  படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.  தமிழ் மொழிபெயர்ப்புக் கான தேர்வுக்குழுவில் இந்திரன், டாக்டர் ஜி.சுந்தர், எஸ்.பக்தவத் சல பாரதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  நளினி என்ற பாலியல் தொழி லாளி ‘என்டே ஆண்கள்’ என்ற  தனது சுயசரிதை மூலம் பெண்கள் மீதான ஆண்களின் கண் ணோட்டத்தையும் அணுகுமுறைகளை யும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் விவரித்துள்ளாா். 1987-ஆம் ஆண்டு பிறந்த விருதா ளர் ப.விமலா  பி.லிட் (தமிழ்), எம்.ஏ. தமிழ் படிப்புகளை சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழகத்தி லும்  எம்.பில்.(தமிழ்),பிஎச்டி(தமிழ்) படிப்புகளை புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் முடித் துள்ளார். தற்போது திருநெல்வேலி மாவட் டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சேவியர்ஸ் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணி யாற்றி வருகிறார்.  தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  நாவலை காஷ்மீரி மொழியில் மொழியாக்கம் செய்த குலாம் நபி ஆத்தஷ் சாகித்திய அகாதெமி விருதுபெறும் விருதாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1947-ஆம் ஆண்டு நாட்டு பிரிவினை யின் போது எழுந்த மதக்கலவரங்கள் பற்றி எழுத்தாளர் பீஷம் சஹானி எழுதிய தமஸ் (இருள்) எனும் இந்தி மொழி நாவலை டோக்ரி மொழியில் மொழி பெயர்த்த அர்ச்சனாகேசருக்கு டோக்ரி மொழி பெயர்ப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பீஷம் சஹானியின் தமஸ் நாவ லுக்கு 1975-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்த நாவலின் அடிப்படையில் இயக்கு நரின் கோவிந்த் நிகாலனி 1988-ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டின் பிற்பகுதியில் நடை பெறும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படுமென சாகித்திய அகா தெமி அறிவித்துள்ளது.