குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது!
முதலமைச்சர் பேச்சு
“1950-களில் குலக்கல்வித் திட் டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். சென்னையை அடுத்த காஞ்சி புரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், ‘கலைஞர் கை வினை திட்டம்’ தொடக்க விழா நடை பெற்றது. இந்த விழாவில் 8,951 கைவினை கலைஞர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, கலைஞர் கைவினைத் திட் டத்தை துவக்கிவைத்த முதலமைச் சர் மு.க. ஸ்டாலின், அப்போது பேசியதாவது: எந்த திட்டமாக இருந்தாலும் சமூகநீதியை, சமத்துவத்தை நிலை நாட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் விஸ்வ கர்மா திட்டம் சமூகநீதிக்கானது அல்ல. இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு கடி தம் எழுதினேன் அந்த கடிதத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் உள்ள குறைகளை நீக்குமாறு எழுதி இருந் தேன். ஆனால் ஒன்றிய அரசு எனது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், சாதி அடிப்படை யில் பாகுபாடு காட்டாத வகையில், கைவினைக் கலைஞர்கள் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான், ‘கலைஞர் கைவினைத் திட்டம்’. இத்திட்டம், மானியத்துடன் கூடிய கடனுதவிகளை கைவினைக் கலைஞர்களுக்கு வழங்குவதுடன், சம நீதியையும் சமூக நீதியையும் வளர்க்கும் திட்டமாக இருக்கும். 1950-களில் குலக்கல்வி திட் டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் ஏற்காது. எனவே கை வினைக் கலைஞர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலா ளர் நா. முருகானந்தம், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள் வெளியீடு!
தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்கு விக்க, தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகளையும், ‘கலைஞர் கை வினைத் திட்ட’த் துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து முக்கிய ஐந்து அறிவிப்புகளையும் முதல மைச்சர் வெளியிட்டார். அதன்படி, “புவிசார் குறியீடு பெறும் பொருட்க ளுக்கான மானியம் ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்; இரண்டாவது, அம்பத்தூரில் ரூ. 5 கோடியில் வாகன மற்றும் உலோகவியல் ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். மூன்றாவது, காஞ்சி புரம் மாவட்டம், பழதண்டலத்தில் சாலைக் கட்டமைப்பு, மழைநீர் வடி கால்வாய் போன்ற உள்கட்டமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். நான்காவது, திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் உற்பத்தி தொழிற் பேட்டையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்” என்றார்.