tamilnadu

img

இந்திய சட்டங்களை இந்தியில் பெயர் மாற்ற தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு

சென்னை,செப்.2-  மூன்று இந்திய சட்டங் களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ் நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் - 1872 ஆகியவற்றின் பெயர்களை பாரதிய நியாய  சன்ஹிதா - 2023, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா - 2023, பாரதிய சாக்ஷயா அதி நயம் - 2023 என்ற பெயர்க ளில் இந்தியில் பெயர் மாற்றம் செய்யும் வகை யிலும், சட்டப் பிரிவுகளை மாற்ற வழிவகை செய்யும் வகையிலும் 3 மசோதாக் களை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்து ள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறி ஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்கவுன்சில் தலைவர் பேட்டி  இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஆங்கிலத்தில் உள்ள  இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வ தையும், இதில் உள்ள சட்டப் பிரிவுகளின் வரிசைகளை இஷ்டம்போல மாற்று வதையும் தமிழ்நாடு, புதுச் சேரி பார் கவுன்சில் எதிர்க் கிறது. இவ்வாறு இந்திய சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வது என்பது அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதி ரானது. எனவே ஒன்றிய அர சின் இத்தகையச் செய லுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கி றோம்.

மறுபரிசீலனை செய்க

 ஒன்றிய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கும் கோரிக்கை மனு அனுப்பி யுள்ளோம். சட்டங்களில் உள்ள சட்டப்பிரிவுகளின் வரி சையை புதிதாக மாற்றி யமைத்தால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்தி பெயர் மாற்றம், சட்டப் பிரிவுகளின் வரிசையை மாற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதேநேரம், இந்த சட்டங்களில் காலச்சூழ லுக்குத் தகுந்தாற்போல் புதி தாக மேற்கொள்ளப்படும் சட்டத் திருத்தங்களை தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் மனதார வரவேற்கி றது. எனவே இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதையும், சட்டப்பிரிவு களின் வரிசைகளை மாற்று வதையும் ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்யும் என நம்புகிறோம். மீறி அமல் படுத்தப்பட்டால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.  இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது, பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், செயலர் சி.ராஜாகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.