tamilnadu

img

செயற்கை நுண்ணறிவு கேமரா: கேரள அமைச்சர் ஆண்டனி ராஜுவுடன் தமிழக அதிகாரிகள் கலந்துரையாடல்

திருவனந்தபுரம்,ஜுலை 29-  சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் ‘சேஃப் கேரளா’ திட்டத்தின் கீழ் பொ ருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமரா அமைப்பை தமிழ்நாடு பின்பற்ற உள்ளது. கர்நாடக அரசு அதிகாரிகள் ஏற்கனவே வந்து இது குறித்து கலந்துரையாடல் நடத்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து இணை ஆணை யர் ஏ.ஏ.முத்து தலைமையில் 5 பேர் கொண்ட குழு கேரளா வந்தது. கட்டுப் பாட்டு அறை மற்றும் சலான் அனுப்பும் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து  நம்பிக்கை பெற்றது. ஆர்டிஓ (அமலாக் கம்) அதிகாரிகளுடன்  கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களை குழுவினர் பார்வையிட்டனர். மேலும் போக்குவரத்து கூடுதல் ஆணை யர் பிரமோஜ் சங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு ஆகியோரிட மும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமலாக்க உபகரணங்களை உற்பத்தி செய்யும் மண் விளயில் உள்ள கெல்ட்ரான் பிரிவையும் குழுவினர் பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடப்பது தமிழகத்தில்தான். 16869 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் 5263 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிர தேசத்தில் 14540 விபத்துகளும் 8506 இறப்பு களும் நிகழ்ந்துள்ளன. ஆந்திரா மூன்றா வது இடத்தில் உள்ளது.

8241 விபத்துக்கள் மற்றும் 3602 இறப்புகள். கேரளா வில் 8048 விபத்துகள் ஏற்பட்டு 975 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள னர். விரைவாக மருத்துவ மனையில் சிகிச்சை கிடைப்பதும் வலுவான அவசர சிகிச்சை ஏற்பாடுகளும் இறப்பைக் குறைக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலையில் 4080 உயிர்கள் பலியாகியுள்ளன. விபத்துக்களின் எண்ணிக்கை 7501. ஏ.ஐ., கேமரா உட்பட, 726 கேமராக்கள் பொருத்த, ஏப்ரலில், 232.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கெல்ட்ரான் செயல்படுத்தியது. இதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளது டன், இறப்பு எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தி ற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உயர்நீதிமன்றத்தை அணுகின. அதே சமயம், மற்ற மாநிலங்களும், அரசும் இது திறமையான திட்டம் என்றும், கெல்ட்ரான் நிறுவனமே இத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் கேரளாவை மற்ற மாநிலங்க ளுக்கு முன்மாதிரியாக மாற்றியதில் பெரு மைப்படுவதாகவும், விவாதத்தை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு இதுவே பதில் என்றும் அமைச்சர் ஆண்டனி ராஜூ பதிலளித் துள்ளார்.