பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்ற மாணவருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வாழ்த்து
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற, ஒரத்தநாடு மாணவருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து, பொன் னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் - மாலதி தம்பதிய ரின் மகன் கோ.ரோஹிந்த். இவர் ஒரத்தநாடு தனியார் பள்ளியில் படித்து வந்தார். அண்மை யில் வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இவர் 597 மதிப்பெண் கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றார். இவர் 3 பாடங்களில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், மாணவரை அவரது வீட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், தென்னமநாடு வடக்கு கிளைச் செயலாளர் சம்பத், தெற்கு கிளைச் செயலா ளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். மாணவர் ரோஹிந்தின் தந்தை கோவிந்த ராஜ், மின்வாரியத்தில் பணிபுரிந்து வரு கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட கால உறுப்பினராகவும் உள்ளார்.