தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு கோட்ட பேரவை
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு கோட்ட பேரவை திருத்துறைப்பூண்டி, ஜுன் 6- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மன்னார்குடி கோட்ட பேரவை தியாகி சிவராமன் நினைவிடத்தில் நடைபெற்றது. கோட்டத் துணைத் தலைவர் கே. துரைராஜ் தலைமை தாங்கினார். கோட்ட துணைச் செயலாளர் சி.சுரேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எம்.கே.என். அனிபா, சிஐடியு மாவட்டத் தலைவர் துவக்க உரையாற்றினார். கோட்டச் செயலாளர் ஜி.வீரபாண்டியன் வேலை அறிக்கை வாசித்தார். திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ், திட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், திட்டப் பொருளாளர் ஜி.ஆர். முருகேஷ், கோட்டத் தலைவர் டி.குமார், கோட்டச் செயலாளர் கே.வினோத், திருத்துறைப்பூண்டி சிஐடியு ஒருங்கிணைப்பாளர் என். பவுன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி நிறைவுரையாற்றினார். கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்ட நிர்வாகி வி. பாப்பையன் நன்றி கூறினார். மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும் இ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.