தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் சந்தித்தார். அப்போது, பாபநாசம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக அம்மாப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அமைப்பது, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத்தெரு - மேலராமநல்லூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக அறிவித்து, அரசாணை வெளியிடுவது உட்பட பல்வேறு கோரிக்கையை முன் வைத்தார்.