சென்னை,மார்ச் 19- தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக் கையை திங்களன்று(மார்ச் 20) நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசு, கடந்த 2 ஆண்டு களாக பொது நிதிநிலை அறிக்கை யுடன், வேளாண் நிதிநிலை அறிக்கை யையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று முடிவுசெய்கிறது. மேலும், மானியக் கோரிக்கைகள் தாக்கல் விவாதம், வேளாண் பட்ஜெட் குறித் தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்ய ப்படும்.